Posts

Showing posts from April, 2021

யார்தான் தடுப்பது! வேகமாக பரவுது கொரோனா: 'பறக்கவில்லை' பறக்கும் படை ...

Image
... from Dinamalar.com |மே 01,2021 https://ift.tt/3nCiNlj via IFTTT

யார்: தொகுதிகளைக் கைப்பற்றப்போவது...வேட்பாளர்கள் திக்... திக். ...

Image
... from Dinamalar.com |மே 01,2021 https://ift.tt/3nN99wB via IFTTT

2023-ம் ஆண்டுதான் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் நஷ்டத்திலிருந்து மீளும் : கிரிசில் அறிக்கை கொரோனா காலத்தில் அதிகம் பாதிப்படைந்த துறைகளில் திரைத்துறையும் ஒன்று. இதில், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள்தான் முதலில் மூடப்பட்டவை. இந்த மல்டிபிளக்ஸின் நிலை, 2023 ம் ஆண்டுதான் சரியாகும் என, கிரிசில் (Crisil) நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2020ம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட திரையரங்குகள், கடந்த ஆண்டு இறுதியில்தான் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது மீண்டும் அவை மூடப்பட்டுவிட்டன. திரையரங்குகள் செயல்படத் தொடங்கி 25 சதவீத அளவுக்கு பார்வையாளர்கள் வரத் தொடங்கி இருந்த சமயத்தில் மீண்டும் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதால், நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக, மீண்டும் இரவு நேர ஊரடங்கு, மெட்ரோ நகர்களில் ஊரடங்கு என பல கட்டுப்பாடுகள் தொடங்கிவிட்டன. அதனால் மீண்டும் திரையரங்கம் முடங்கி, திரைத்துறை முடங்கியுள்ளது. 2023-ம் ஆண்டுதான் திரைத்துறை இயல்பு நினைவுக்கு வரும் என கிரிசில் என்ற நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மகராஷ்டிராவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதால், அங்கு எங்கும் புதிய படங்கள் வெளியாகவில்லை. தியேட்டர் வருமானத்தில் மஹாராஷ்டிராவின் பங்கு அதிகம் என்பதால் அம்மாநிலத்தில் இதர நகரங்களிலும், படத்தை வெளியிட விரும்பவில்லை. மகாராஷ்ட்ரா மட்டுமன்றி, நாடு முழுவதுமே கடந்த நிதி ஆண்டில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. அதேபோல நடப்பு நிதி ஆண்டிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனங்கள் நஷ்டத்தையே சந்திக்கும் என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு பராமரிப்பு, விரிவாக்க திட்டங்களுக்கான செலவுகளை குறைத்தது என பலவகையில் நஷ்டத்தை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இறுதியில் நஷ்டத்தையே சந்தித்தனர் தியேட்டர் உரிமையாளர்கள். தவிர ஓடிடிகளின் வருகையால் வீட்டில் இருந்தே மக்கள் படம் பார்க்க தொடங்கிவிட்டார்கள். கோவிட்-19 அச்சம் முழுமையாக குறைவது மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் அதிகளவில் வெளியாவது மட்டுமே, மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மீண்டெழுவதற்கு முக்கியமான வழிகள் என கிரிசில் தெரிவித்திருக்கிறது. இது எப்போது சாத்தியப்படுமோ என வழிமேல் விழி வைத்து, ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் தியேட்டர் நிறுவனர்கள்! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கொரோனா காலத்தில் அதிகம் பாதிப்படைந்த துறைகளில் திரைத்துறையும் ஒன்று. இதில், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள்தான் முதலில் மூடப்பட்டவை. இந்த மல்டிபிளக்ஸின் நிலை, 2023 ம் ஆண்டுதான் சரியாகும் என, கிரிசில் (Crisil) நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2020ம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட திரையரங்குகள், கடந்த ஆண்டு இறுதியில்தான் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது மீண்டும் அவை மூடப்பட்டுவிட்டன. திரையரங்குகள் செயல்படத் தொடங்கி 25 சதவீத அளவுக்கு பார்வையாளர்கள் வரத் தொடங்கி இருந்த சமயத்தில் மீண்டும் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதால், நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக, மீண்டும் இரவு நேர ஊரடங்கு, மெட்ரோ நகர்களில் ஊரடங்கு என பல கட்டுப்பாடுகள் தொடங்கிவிட்டன. அதனால் மீண்டும் திரையரங்கம் முடங்கி, திரைத்துறை முடங்கியுள்ளது. 2023-ம் ஆண்டுதான் திரைத்துறை இயல்பு நினைவுக்கு வரும் என கிரிசில் என்ற நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மகராஷ்டிராவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதால், அங்கு எங்கும் புதிய படங்கள் வெளியாகவில்லை. தியேட்டர் வருமானத்தில் ம...

கர்ணன் தெலுங்கு ரீமேக்... விருப்பம் தெரிவித்த இளம் ஹீரோ! தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோ பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், கர்ணனின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார். கலைப்புலி தாணு தயாரிப்பில் திரையரங்குகளில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியானது கர்ணன் திரைப்படம். சந்தேஷ் நாராயணனின் உயிரோட்டமான இசையும், தனுஷின் பக்குவமான நடிப்பும், மாரி செல்வராஜின் அற்புதமான திரைக் கதையும், தேனி ஈஸ்வரின் அழகியலும், வாழ்வியலும் கொண்ட ஒளிப்பதிவும் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை உண்டு செய்தது. இத்திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் படம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே, கர்ணனின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க பிரபல நடிகர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆந்திர தேசத்தில் இருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. அவர் வேறு யாருமல்ல, தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோ பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் தான். தமிழ் திரைப்படமான ராட்சாசனின் ரீமேக்கில் ஏற்கனவே நடித்து வெற்றி வாகை சூடியவர் சாய் ஸ்ரீனிவாஸ். இவர் தற்போது தெலுங்கில் ஹிட் அடித்த சத்ரபதி படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக படத்தின் பணிகள் தாமதமடைந்து வருகிறது. இதற்கிடையே, பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் சமீபத்தில் கர்ணன் படத்தை பார்த்துள்ளார். படத்தின் கதை, திரைக்கதை என அனைத்தும் பிடித்து போக, அவரே கர்ணன் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார். படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெலுங்கு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உரிமையை கைப்பற்றியதும் நடிகர்கள் மற்றும் குழுவினரை தயாரிப்பாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கர்ணன் திரைப்படம் ஒடிடி தளமான அமேசான் பிரைமில் மே 9 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு திரைப்படம் 30 நாள்கள் தியேட்டரில் வெளியான பின்பு ஒடிடியில் வெளிடலாம் என்ற விதிமுறையை பின்பற்றி மே 9 ஆம் தேதி அமேசானில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோ பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், கர்ணனின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார். கலைப்புலி தாணு தயாரிப்பில் திரையரங்குகளில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியானது கர்ணன் திரைப்படம். சந்தேஷ் நாராயணனின் உயிரோட்டமான இசையும், தனுஷின் பக்குவமான நடிப்பும், மாரி செல்வராஜின் அற்புதமான திரைக் கதையும், தேனி ஈஸ்வரின் அழகியலும், வாழ்வியலும் கொண்ட ஒளிப்பதிவும் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை உண்டு செய்தது. இத்திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் படம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே, கர்ணனின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க பிரபல நடிகர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆந்திர தேசத்தில் இருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. அவர் வேறு யாருமல்ல, தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோ பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் தான். தமிழ் திரைப்படமான ராட்சாசனின் ரீமேக்கில் ஏற்கனவே நடித்து வெற்றி வாகை சூடியவர் சாய் ஸ்ரீனிவாஸ். இவர் தற்போது தெலுங்கில் ஹிட் அடித்த சத்ரபதி படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். கொரோனாவின் இ...

ஒரே ஒரு டிவி ஷோவில் நடித்ததன் மூலம் ரூ.185 கோடி ஈட்டிய சீன நடிகை! விசாரணையை முடுக்கிய அரசு கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டிப் போட்டுள்ள நிலையில் சினிமா தொழில் அதிகளவிலான இழப்பை சந்தித்து வருகிறது. வெள்ளித்திரை பிரபலங்கள் OTT, டிவி என சின்னத்திரையில் பிஸியாக நடித்து வரும் நிலையில் சீனாவை சேர்ந்த உச்ச நடிகை ஜெங் ஷுவாங் ஒரே ஒரு டிவி ஷோவில் நடித்ததன் மூலம் 185 கோடி ரூபாய் ஈட்டியுள்ளார்.  ஒரு ஆண்டு முழுவதும் பிஸியாக நடித்தால் தான் இந்த தொகையை ஹாலிவுட் சினிமாவில் அதிகம் வருமானம் ஈட்டும் நடிகர்கள் ஈட்ட முடியும். அதற்கு நிகரான வருமானத்தை வெறும் 77 நாட்களில் ஒரு டிவி ஷோவில் நடித்து ஈட்டியுள்ளார் ஜெங் ஷுவாங்.  இது தொடர்பாக அதிக வருமானம் மற்றும் வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்காக அவர் மீது விசாரணையை முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்கு தான் ஒத்துழைப்பதாகவும் Weibo போஸ்டில் பதிவு செய்துள்ளார் ஜெங் ஷுவாங்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டிப் போட்டுள்ள நிலையில் சினிமா தொழில் அதிகளவிலான இழப்பை சந்தித்து வருகிறது. வெள்ளித்திரை பிரபலங்கள் OTT, டிவி என சின்னத்திரையில் பிஸியாக நடித்து வரும் நிலையில் சீனாவை சேர்ந்த உச்ச நடிகை ஜெங் ஷுவாங் ஒரே ஒரு டிவி ஷோவில் நடித்ததன் மூலம் 185 கோடி ரூபாய் ஈட்டியுள்ளார்.  ஒரு ஆண்டு முழுவதும் பிஸியாக நடித்தால் தான் இந்த தொகையை ஹாலிவுட் சினிமாவில் அதிகம் வருமானம் ஈட்டும் நடிகர்கள் ஈட்ட முடியும். அதற்கு நிகரான வருமானத்தை வெறும் 77 நாட்களில் ஒரு டிவி ஷோவில் நடித்து ஈட்டியுள்ளார் ஜெங் ஷுவாங்.  இது தொடர்பாக அதிக வருமானம் மற்றும் வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்காக அவர் மீது விசாரணையை முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்கு தான் ஒத்துழைப்பதாகவும் Weibo போஸ்டில் பதிவு செய்துள்ளார் ஜெங் ஷுவாங்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3eN8YgF via IFTTT

’தேர்தல் பின்னணியில் ஒரு கதை எழுதியிருந்தோம்' : கேவி ஆனந்த் குறித்து கபிலன் வைரமுத்து ”கடந்த ஓராண்டு காலமாக விவாதித்து, ‘தேர்தல் அரசியலின் பின்னணியில் நிகழும் ஒரு காதல் கதையை’ எழுதியிருந்தோம். தயாரிப்பாளர்களோடு பேச்சுவார்த்தை தொடங்கியிருந்த நிலையில் இந்த பெருந்துயரம் நிகழ்ந்துவிட்டது” என்று மறைந்த இயக்குநர் கே.வி ஆனந்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து. ”இன்று அதிகாலை இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களின் மரணச்செய்தி கேட்டதில் இருந்து மனம் உடைந்திருக்கும் அவரது எத்தனையோ ரசிகர்களில் நானும் ஒருவன். அவரோடு பாடலாசிரியராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அவரோடு பயணித்த ஒவ்வொரு நாளும் ஒரு கல்வி நாளாகவே இருந்தது. ஒரு கதைக்கான களத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அதற்குள் அவர் நிகழ்த்தும் தேடல் அபாரமானது. உண்மையானது. திரைக்கதை உருவாக்கத்தில் அவர் செலுத்திய உழைப்பு இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு இன்றியமையாத பாடம். கடந்த ஓராண்டு காலமாக விவாதித்து, ‘தேர்தல் அரசியலின் பின்னணியில் நிகழும் ஒரு காதல் கதையை’ எழுதியிருந்தோம். கோ, கவண் போன்ற படங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வைப் போல இந்தப் படமும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று உறுதியாக அவர் நம்பினார். பட உருவாக்கத்திற்காக அவர் தயாரிப்பாளர்களோடு பேச்சுவார்த்தை தொடங்கியிருந்த நிலையில் இந்த பெருந்துயரம் நிகழ்ந்துவிட்டது. ஒரு சிறந்த இயக்குனரை - ஒப்பற்ற சிந்தனையாளரை - ஒப்பனையற்ற மனிதரை இழந்துவிட்டோம். அவருடைய திரைப்படங்களால் அவர் நம்மோடு வாழ்ந்திருப்பார். என்னைப் பொறுத்தவரையில் அவர் இறக்கவில்லை. எனக்குள் ஒரு புன்னகையாகவே புதைந்திருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
”கடந்த ஓராண்டு காலமாக விவாதித்து, ‘தேர்தல் அரசியலின் பின்னணியில் நிகழும் ஒரு காதல் கதையை’ எழுதியிருந்தோம். தயாரிப்பாளர்களோடு பேச்சுவார்த்தை தொடங்கியிருந்த நிலையில் இந்த பெருந்துயரம் நிகழ்ந்துவிட்டது” என்று மறைந்த இயக்குநர் கே.வி ஆனந்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து. ”இன்று அதிகாலை இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களின் மரணச்செய்தி கேட்டதில் இருந்து மனம் உடைந்திருக்கும் அவரது எத்தனையோ ரசிகர்களில் நானும் ஒருவன். அவரோடு பாடலாசிரியராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அவரோடு பயணித்த ஒவ்வொரு நாளும் ஒரு கல்வி நாளாகவே இருந்தது. ஒரு கதைக்கான களத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அதற்குள் அவர் நிகழ்த்தும் தேடல் அபாரமானது. உண்மையானது. திரைக்கதை உருவாக்கத்தில் அவர் செலுத்திய உழைப்பு இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு இன்றியமையாத பாடம். கடந்த ஓராண்டு காலமாக விவாதித்து, ‘தேர்தல் அரசியலின் பின்னணியில் நிகழும் ஒரு காதல் கதையை’ எழுதியிருந்தோம். கோ, கவண் போன்ற படங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வைப் போல இந்தப் படமும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று உறுதியாக அவர...

கே.வி சாரின் ’கோ’ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது; இப்போது இணைய இருந்தோம் - சிம்பு இயக்குநர் கே.வி ஆனந்த் மறைவிற்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ந்து பேசாத நல்ல மனிதம் கேவி ஆனந்த் சாருடன் ’கோ’ படத்தில் நான் நடித்திருக்கவேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படி ஆகிவிட்டது. சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லி இருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் என சொல்லியிருந்தேன். தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக்கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது.பொய் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன். இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி ஆனந்த் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறைய படங்களை தொடர்ந்து தந்திருப்பார். அவரின் மறைவு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் திரையுலகினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இயக்குநர் கே.வி ஆனந்த் மறைவிற்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ந்து பேசாத நல்ல மனிதம் கேவி ஆனந்த் சாருடன் ’கோ’ படத்தில் நான் நடித்திருக்கவேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படி ஆகிவிட்டது. சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லி இருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் என சொல்லியிருந்தேன். தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக்கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது.பொய் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன். இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி ஆனந்த் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறைய படங்களை தொடர்ந்து தந்திருப்பார். அவரின் மறைவு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் திரையுலகினருக்கும் எனது ஆறுதலை தெரி...

”கே.வி. ஆனந்த் சார் மிகவும் சீக்கிரமே சென்று விட்டீர்கள்” - சோகத்தில் தமிழ் திரையுலகம்! கே.வி.ஆனந்த் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தங்களது சமூகவலைதள பக்கங்கள் மூலமாக தெரிவித்துள்ளனர்.  அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய 54 வயதான கே.வி. ஆனந்த், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தங்களது சமூகவலைதள பக்கங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.  நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ ஒரு நேர்மையான நல்ல மனிதர் இறந்துவிட்டார். அவர் அன்பையும் மகிழ்ச்சியையும் தனது வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்த மனிதர். கே.வி.ஆனந்த் சார் மிக சீக்கிரமே சென்று விட்டீர்கள்.. மிக சீக்கிரமே.. அவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கே.வி. ஆனந்தின் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.  A gentle kind honest man has passed away. A very sweet man full of life love and joy. K.v anand sir .. gone too soon sir. Too soon. My condolences to his family. Rest in peace k.v sir. — Dhanush (@dhanushkraja) April 30, 2021 ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ இந்தச் செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்து விட்டது. இது எனது இதயத்திற்கு மிகவும் வலிதரக்கூடிய ஒன்றாக அமைந்துவிட்டது. நான் எனது நெருங்கிய தோழனை இழந்துவிட்டேன். அவர் ஒரு அற்புதமான ஒளிப்பதிவாளர், மிகச் சிறந்த இயக்குநர்.  இந்த இழப்பை எதனாலும் ஈடு செய்ய இயலாது. எனது நண்பனை நான் மிஸ் செய்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.  Absolutely shocked. My heart feels so heavy... painful.Just can’t digest..I lost a very dear friend K.V a wonderful cinematographer, and a brilliant director.This loss can never be compensated. I will miss you my dear friend.R.I.P?My deepest condolences to his family and friends — Shankar Shanmugham (@shankarshanmugh) April 30, 2021 ஆர்யா கூறும் போது, “ இந்தச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. எனது இதயம் நொறுங்கி விட்டது. இது நிச்சயம் உண்மையாக இருக்க கூடாது. நான் உங்களை மிஸ் செய்கிறேன். மிகவும் சீக்கிரமே சென்றுவிட்டீர்கள்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.  Unbelievable and shocking news. Heartbroken. I wish this is not true Will miss you sir. Gone too soon #RIPKVAnand @anavenkat — Arya (@arya_offl) April 30, 2021 பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் கூறும் போது, “ மிகவும் சீக்கிரமே எங்களை விட்டுச் சென்று விட்டாய். நீ எப்போதும் என்னில் ஒரு பகுதியாய் இருப்பாய் நண்பனே.. பிரியாவிடை..” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.   #RIPKVAnand Left us too soon You will be always part of me my friend . Farewll. pic.twitter.com/8fgMlaYqz9 — pcsreeramISC (@pcsreeram) April 30, 2021 மேலும் பிரபலங்கள் மற்றும் பிரபல நிறுவனங்கள் செய்த ட்வீட்கள் Rest in peace my friend ! pic.twitter.com/NKf4dba40I — selvaraghavan (@selvaraghavan) April 30, 2021 Rest in peace my friend ! pic.twitter.com/NKf4dba40I — selvaraghavan (@selvaraghavan) April 30, 2021 Deepest condolences.... ?? Rest in Peace KV Anand sir... pic.twitter.com/MUohDakROZ — karthik subbaraj (@karthiksubbaraj) April 30, 2021 Rest in peace! @anavenkat sir#RIPKVAnand #KVAnand pic.twitter.com/BNcKoJd1Fg — Lyca Productions (@LycaProductions) April 30, 2021 We've lost a wonderful creator. #KVAnand sir may you rest in peace. My condolences to the family... pic.twitter.com/kx6re0jpv7 — Gautham Karthik (@Gautham_Karthik) April 30, 2021 Saddened to hear this news...we will miss you sir! Rest In Peace sir ?? pic.twitter.com/2T6iCEEbnL — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 30, 2021 #kvanand Sir, you were one of the most passionate & disciplined filmmaker’s I had the honour to work with. You launched me into Tamil Cinema & for that I will always be forever grateful. Thank you for everything sir. Cinema will not be the same without you. Rest in Peace sir ??♥️ pic.twitter.com/aR1yscsWuU — Amyra Dastur (@AmyraDastur93) April 30, 2021 Rest in peace K. V. Anand sir! You played a way more important role in my career than you will ever realise. Indian cinema will miss you forever! ? Heartbroken! ? pic.twitter.com/IbAOvflFfm — Prithviraj Sukumaran (@PrithviOfficial) April 30, 2021 Just woke up to this sad news that Dir KV Anand garu is no more. Wonderful cameraman , brilliant director and very nice gentleman . Sir you will always be remember & missed . Condolences to the near , dear & family . Rest in Peace Sir . #KVAnand pic.twitter.com/V6ombIxZcy — Allu Arjun (@alluarjun) April 30, 2021 Shocked and shattered to know the demise of KV Anand Sir.. No words to describe what I feel.. May his soul Rest In Peace.. Prayers to his family Gone too soon! — Jiiva (@JiivaOfficial) April 30, 2021 My deepest condolences...Rest in peace sir ?????? pic.twitter.com/EUjILxuDPB — pa.ranjith (@beemji) April 30, 2021   Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கே.வி.ஆனந்த் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தங்களது சமூகவலைதள பக்கங்கள் மூலமாக தெரிவித்துள்ளனர்.  அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய 54 வயதான கே.வி. ஆனந்த், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தங்களது சமூகவலைதள பக்கங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.  நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ ஒரு நேர்மையான நல்ல மனிதர் இறந்துவிட்டார். அவர் அன்பையும் மகிழ்ச்சியையும் தனது வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்த மனிதர். கே.வி.ஆனந்த் சார் மிக சீக்கிரமே சென்று விட்டீர்கள்.. மிக சீக்கிரமே.. அவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கே.வி. ஆனந்தின் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.  A gentle kind honest man has passed away. A ve...

”தடைகள் பல கடந்துதான் கனா கண்டேன் படத்தில் கே.வி. ஆனந்துடன் இணைந்தேன் - நடிகர் ஸ்ரீகாந்த் கே.வி.ஆன்ந்த் இன்று காலமானதை தொடர்ந்து அவர் இயக்குநராக அறிமுகமான முதல் படத்தில் கதாநாயகனாக பணியாற்றிய ஸ்ரீகாந்த் அவருடனான அனுபவங்களை புதியதலைமுறையிடம் பகிர்ந்து கொண்டார்.  இது குறித்து அவர் கூறும் போது, “அவரது இயக்கிய முதல் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல தடைகளை கடந்துதான் நாங்கள் “கனா கண்டேன்” படத்தில் இணைந்தோம். ‘கனா கண்டேன்’ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என்று அவருக்கு ஒரு வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தைப் போக்க சூர்யா மற்றும் பி.சி.ஸ்ரீராம் ஆகியோரை வரவழைத்து ஒரு சிறிய விழா ஒன்றை நடத்தினேன். அதில் பிசி ஸ்ரீராம் கே.வி.ஆனந்திற்கு விருது வழங்கினார். ’கனா கண்டேன்’ படத்தில் பாடல்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு இருந்த போதும் அவர் தனது முதல்படத்தை தமிழ்நாட்டிலேயே அதுவும் சென்னையிலே எடுத்துக்காட்டுகிறேன் என்று சவாலாக எடுத்துக்காட்டினார். அவர் அர்ப்பணிப்போடு உழைக்கக்கூடியவர்.அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். அவர் இருக்கும் இடத்திற்கு கேரவன் உள்ளிட்ட வசதிகளை தாரளமாக பயன்படுத்தலாம். ஆனால் அவர் மொட்டை வெயிலில் நின்று கொண்டுதான் சாப்பிடுவார்.  வேலையின் காரணமாக அவர் நடந்துகொள்ளும் விதம் நமக்கு அவரை ஒரு முன்கோபகாரர் போல காட்டும். ஆனால் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவர் இயக்குநராக பணியாற்றிக்கொண்டிந்த போது ஒரு முறை நான் அவரிடம் நீங்கள் இனி ஒளிப்பதிவாளராக பணியாற்றுவீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ஒருவர் இரு தளங்களில் கால் வைக்கக்கூடாது, நான் இயக்குநராகவே இருப்பேன்’ என்றார். முன்னதாக, அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய 54 வயதான கே.வி. ஆனந்த், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவரது உடல் நேரடியாக பெசண்ட்  நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.   Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கே.வி.ஆன்ந்த் இன்று காலமானதை தொடர்ந்து அவர் இயக்குநராக அறிமுகமான முதல் படத்தில் கதாநாயகனாக பணியாற்றிய ஸ்ரீகாந்த் அவருடனான அனுபவங்களை புதியதலைமுறையிடம் பகிர்ந்து கொண்டார்.  இது குறித்து அவர் கூறும் போது, “அவரது இயக்கிய முதல் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல தடைகளை கடந்துதான் நாங்கள் “கனா கண்டேன்” படத்தில் இணைந்தோம். ‘ கனா கண்டேன்’ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என்று அவருக்கு ஒரு வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தைப் போக்க சூர்யா மற்றும் பி.சி.ஸ்ரீராம் ஆகியோரை வரவழைத்து ஒரு சிறிய விழா ஒன்றை நடத்தினேன். அதில் பிசி ஸ்ரீராம் கே.வி.ஆனந்திற்கு விருது வழங்கினார். ’கனா கண்டேன்’ படத்தில் பாடல்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு இருந்த போதும் அவர் தனது முதல்படத்தை தமிழ்நாட்டிலேயே அதுவும் சென்னையிலே எடுத்துக்காட்டுகிறேன் என்று சவாலாக எடுத்துக்காட்டினார். அவர் அர்ப்பணிப்போடு உழைக்கக்கூடியவர்.அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். அவர் இருக்கும் இடத்திற்கு கேரவன் உள்ளிட்ட வசதிகளை தாரளமாக பயன்படுத்தலாம். ஆனால் அவர் மொட்டை வெயிலில் நின்று கொண்டுதான் சாப்ப...

மூத்த தமிழ் குணச்சித்திர நடிகர் செல்லதுரை மரணம் மூத்த தமிழ் குணச்சித்திர நடிகர் செல்லதுரை நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.  தமிழில் ’தெறி’, ’மாரி’, ’கத்தி’, ’நட்பே துணை’ போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் செல்லதுரை. செல்லத்துரை ஐயா என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். 84 வயதான இவர் சென்னையிலுள்ள அவரது வீட்டுக் கழிப்பறையில் சுயநினைவின்றி மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே கடந்த வாரம் நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்ததை அடுத்து நேற்று செல்லதுரை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். திரைப் பிரபலங்கள் அடுத்தடுத்த உயிரிழப்பது குறித்து பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மூத்த தமிழ் குணச்சித்திர நடிகர் செல்லதுரை நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.  தமிழில் ’தெறி’, ’மாரி’, ’கத்தி’, ’நட்பே துணை’ போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் செல்லதுரை. செல்லத்துரை ஐயா என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். 84 வயதான இவர் சென்னையிலுள்ள அவரது வீட்டுக் கழிப்பறையில் சுயநினைவின்றி மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே கடந்த வாரம் நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்ததை அடுத்து நேற்று செல்லதுரை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். திரைப் பிரபலங்கள் அடுத்தடுத்த உயிரிழப்பது குறித்து பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/330Tgsz via I...

மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திற்கு கொரோனா உறுதி; நேரடியாக தகனம் செய்ய ஏற்பாடு மறைந்த பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்திற்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் இன்று காலை 3 மணிக்கு காலமானார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததும், அதற்காக அவர் கடந்த 20 ஆம் தேதி அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதும் தெரியவந்துள்ளது. மேலும் கே.வி.ஆனந்தின் மனைவிக்கும் அவரது மகள்களான இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதும், அதனைத்தொடர்ந்து அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில் குணமடைந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் அதனைத்தொடர்ந்து ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கே.வி.ஆனந்த் காலமாகியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவரது உடல் நேரடியாக பெசண்ட்  நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.  முன்னதாக, அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய 54 வயதான கே.வி. ஆனந்த், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மறைந்த பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்திற்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் இன்று காலை 3 மணிக்கு காலமானார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததும், அதற்காக அவர் கடந்த 20 ஆம் தேதி அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதும் தெரியவந்துள்ளது. மேலும் கே.வி.ஆனந்தின் மனைவிக்கும் அவரது மகள்களான இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதும், அதனைத்தொடர்ந்து அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில் குணமடைந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் அதனைத்தொடர்ந்து ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கே.வி.ஆனந்த் காலமாகியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவரது உடல் நேரடியாக பெசண்ட்  நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.  முன்னதாக, அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய 54 வயதான கே.வி. ஆனந்த், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு க...

”அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” - கே.வி. ஆனந்த் மறைவுக்கு ரஜினி இரங்கல் பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “ மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.  மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும். — Rajinikanth (@rajinikanth) April 30, 2021 முன்னதாக, அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய 54 வயதான கே.வி. ஆனந்த், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கமல், குஷ்பூ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அவருக்கு தங்களது இரங்கலை தனது சமூகவலைதளப்பக்கங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த்  மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “ மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.  மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும். — Rajinikanth (@rajinikanth) April 30, 2021 முன்னதாக, அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய 54 வயதான கே.வி. ஆனந்த், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெ...

"தளராத தன்முனைப்பினால் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் கே.வி.ஆனந்த்" - கமல் புகழஞ்சலி இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி." எனத் தெரிவித்துள்ளார். பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு  சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி. — Kamal Haasan (@ikamalhaasan) April 30, 2021 இதேபோல், நடிகைகள் குஷ்பு, ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி." எனத் தெரிவித்துள்ளார். பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு  சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி. — Kamal Haasan (@ikamalhaasan) April 30, 2021 இதேபோல், நடிகைகள் குஷ்பு, ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  Source : WWW.PUTHIYATHALAIMU...

“விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்” - வைரமுத்து புகழஞ்சலி கே.வி.ஆனந்த் மறைவுக்கு கவிதை மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.  பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த்  இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கே.வி.ஆனந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அதில்,   ''வருந்துகிறேன் நண்பா! திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கினாய்! வாஜி வாஜி பாடலை ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்! என் எத்தனையோ பாடல்களை ரத்தினமாய் மாற்றினாய்! இதோ உனக்கான இரங்கல்பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்? விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்! ஒளியாய் வாழ்வாய் இனி நீ.'' இவ்வாறு வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கே.வி.ஆனந்த் மறைவுக்கு கவிதை மூலம்   புகழஞ்சலி செலுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.  பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த்   இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கே.வி.ஆனந்த் மறைவுக்கு  கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அதில்,   ''வருந்துகிறேன் நண்பா! திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கினாய்! வாஜி வாஜி பாடலை ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்! என் எத்தனையோ பாடல்களை ரத்தினமாய் மாற்றினாய்! இதோ உனக்கான இரங்கல்பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்? விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்! ஒளியாய் வாழ்வாய் இனி நீ.'' இவ்வாறு வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3aQdqd3 via IFTTT

கேமராமேன் டூ டைரக்டர்.. கே.வி.ஆனந்த் கடந்து வந்த திரையுலகப் பாதை.. தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கி இயக்குநராகத் தடம் பதித்த கே.வி.ஆனந்தின் திரையுலக பயணத்திலிருந்து சில துளிகள். குமார் வெங்கடேசன் ஆனந்த் என்ற இயற்பெயரை கொண்ட கே.வி.ஆனந்த், ஒளிப்பதிவாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கி இயக்குநராகத் தடம் பதித்தவர்களில் முக்கியமானவர். 2005-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான  ‘கனாக் கண்டேன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கே.வி.ஆனந்த். அவரது படைப்புகளான கோ, அயன், அநேகன், மாற்றான், கவண், காப்பான் போன்ற படங்கள் வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றப் படைப்புகள் ஆகும். குறிப்பாக ‘அயன்’, ‘கோ’ ஆகிய இரு திரைப்படங்கள் மூலம் சினிமா ரசிகர்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார் கே.வி.ஆனந்த்.  1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் 'தென்மாவின் கொம்பத்து' என்ற மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றார். தமிழில் முதன்முதலில் காதல் தேசம் என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். பின்னர், நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், செல்லமே ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இயக்குனர் ஷங்கர், நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரேயா கூட்டணியில் வெளியான 'சிவாஜி' திரைப்படத்திற்காக சிறந்த தென்னிந்திய ஒளிப்பதிவாளருக்கான ஃபிலிம்பேர் விருதை கே.வி.ஆனந்த் தட்டிச்சென்றார்.  கடைசியாக, 2019-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் மாரடைப்பால் நடிகர் விவேக் உயிரிழந்த சோகம் தணிவதற்குள், கே.வி.ஆனந்தின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துரையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கி இயக்குநராகத் தடம் பதித்த   கே.வி.ஆனந்தின் திரையுலக   பயணத்திலிருந்து சில துளிகள். குமார் வெங்கடேசன் ஆனந்த் என்ற இயற்பெயரை கொண்ட கே.வி.ஆனந்த், ஒளிப்பதிவாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கி இயக்குநராகத் தடம் பதித்தவர்களில் முக்கியமானவர். 2005-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான  ‘கனாக் கண்டேன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கே.வி.ஆனந்த். அவரது படைப்புகளான கோ, அயன், அநேகன், மாற்றான், கவண், காப்பான் போன்ற படங்கள் வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றப் படைப்புகள் ஆகும். குறிப்பாக ‘அயன்’, ‘கோ’ ஆகிய இரு திரைப்படங்கள் மூலம் சினிமா ரசிகர்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார் கே.வி.ஆனந்த் .  1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் 'தென்மாவின் கொம்பத்து' என்ற மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றார். தமிழில் முதன்முதலில் காதல் தேசம் என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். பின்னர், நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், செல்லமே ஆகிய படங்களு...

பிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்! பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 54. அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் கே.வி. ஆனந்த். 54 வயதான கே.வி. ஆனந்த் கொரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு காலமானார் கே.வி. ஆனந்த். அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    மாரடைப்பால் நடிகர் விவேக் உயிரிழந்த சோகம் தணிவதற்குள், மற்றொரு திரை ஆளுமையும் மறைந்தது தமிழ்த் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 54. அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் கே.வி. ஆனந்த். 54 வயதான கே.வி. ஆனந்த் கொரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு காலமானார் கே.வி. ஆனந்த். அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     மாரடைப்பால் நடிகர் விவேக் உயிரிழந்த சோகம் தணிவதற்குள், மற்றொரு திரை ஆளுமையும் மறைந்தது தமிழ்த் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3nzOhsq via IFTTT

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும்! - சோனு சூட் ’கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கவேண்டும்’ என்று மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் சோனு சூட். கொரோனா காலத்தில் தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து வருகிறார் நடிகர் சோனு சூட். தனது சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள், கல்விக்கான உதவிகள் என்று தனது கரங்களை நீட்டி வருகிறார். ஏற்கனவே, கொரோனா பரவலின் இரண்டாவது அலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை என அனைத்து வயதுடையவர்களும் பாதிக்கப்படுவதால் ‘பொதுத்தேர்வுகளை ரத்து செய்யவேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கவேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். पूरे देश को मिल के इस मुहिम में जुड़ना है। @EduMinOfIndia pic.twitter.com/ei9QJYtDcF — sonu sood (@SonuSood) April 29, 2021 இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “ கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இலவசக் கல்வியை அளிக்க முன்வரவேண்டும். அது பள்ளிக் கல்வியாக இருந்தாலும் சரி, கல்லூரி கட்டணமாக இருந்தாலும் சரி. அரசு மற்றும் தனியார் பள்ளிக், கல்லூரியாக இருந்தாலும் முழு கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும்” என்று வீடியோவில் கோரிக்கை வைத்துள்ள அவர், ’கொரோனாவால் நேசிப்பவர்களை இழந்த ஒவ்வொருவரும் ஒன்றுசேர வேண்டும்’ என்றும் கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
’கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கவேண்டும்’ என்று மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் சோனு சூட். கொரோனா காலத்தில் தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து வருகிறார் நடிகர் சோனு சூட். தனது சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள், கல்விக்கான உதவிகள் என்று தனது கரங்களை நீட்டி வருகிறார். ஏற்கனவே, கொரோனா பரவலின் இரண்டாவது அலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை என அனைத்து வயதுடையவர்களும் பாதிக்கப்படுவதால் ‘பொதுத்தேர்வுகளை ரத்து செய்யவேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கவேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். पूरे देश को मिल के इस मुहिम में जुड़ना है। @EduMinOfIndia pic.twitter.com/ei9QJYtDcF — sonu sood (@SonuSood) April 29, 2021 இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “ கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்...

ஹெச்.வினோத்துடன் மூன்றாவது முறையாக இணையும் அஜித்? `வலிமை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தப் படத்தையும் ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிப்பார் என சொல்லப்படுகிறது. முன்னதாக `நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணி இணைந்தது. அந்த வெற்றியை தொடர்ந்துதான், ‘வலிமை’ உருவாகி வருகிறது. கொரோனா காரணமாக ‘வலிமை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது. ஆகவே படம் குறித்த முதற்கட்ட தகவல்கள் பற்றிய அறிவிப்புகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. சூழல் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனாலும், ‘வலிமை’ படத்தை, எப்படியாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அதே உறுதியுடன் அஜித், ஹெச்.வினோத் கூட்டணியில் மீண்டும் ஒரு படத்தை அவரே தயாரிக்கிறார். இதுபற்றிய தகவல்கள், சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதை உறுதிசெய்யும் வகையில், அந்த படத்துக்கு நடிகர் அஜித் தற்போது கால்ஷீட் கொடுத்திருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. ‘வலிமை’ போல அல்லாமல், அடுத்த படத்தை, குறைந்த நாட்களில் படமாக்க வேண்டும் என்றும், அதற்காக 65 நாட்கள் மட்டுமே நடிகர் அஜித் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படப்பிடிப்பு, ஜுலை 2021, அதாவது ’வலிமை’ படத்தின் ரிலீஸுக்கு முன்பே தொடங்கிவிடும் என சொல்லப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
`வலிமை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தப் படத்தையும் ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிப்பார் என சொல்லப்படுகிறது. முன்னதாக `நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணி இணைந்தது. அந்த வெற்றியை தொடர்ந்துதான், ‘வலிமை’ உருவாகி வருகிறது. கொரோனா காரணமாக ‘வலிமை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது. ஆகவே படம் குறித்த முதற்கட்ட தகவல்கள் பற்றிய அறிவிப்புகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. சூழல் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனாலும், ‘வலிமை’ படத்தை, எப்படியாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அதே உறுதியுடன் அஜித், ஹெச்.வினோத் கூட்டணியில் மீண்டும் ஒரு படத்தை அவரே தயாரிக்கிறார். இதுபற்றிய தகவல்கள், சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதை உறுதிசெய்யும் வகையில், அந்த படத்துக்கு நடிகர் அஜித் தற்போது கால்ஷீட் கொடுத்திருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. ‘வலிமை’ போல அல்லாமல், அடுத்த படத்தை,...

ராம் இயக்கத்தில் நிவின் பாலி! - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 'பேரன்பு' படத்துக்குப் பின், இயக்குநர் ராம், நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து இருமொழி படமொன்றை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் படக்குழுவினர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ராம் இயக்கத்தில், சில ஆண்டுகளுக்கு முன் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி, நடிகை அஞ்சலி, சிறுமி, சாதனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருந்த படம் 'பேரன்பு'. இந்தப் படத்துக்குப் பின், நடிப்பில் கவனம் செலுத்திய ராம், படங்கள் இயக்காமல் இருந்தார். அப்படி, கடைசியாக மிஷ்கின் இயக்கிய 'சைக்கோ' படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார் அவர். ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட 'பேரன்பு' படத்தில், கேரளாவை சேர்ந்த திருநங்கை அஞ்சலி அமீர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் தற்போது ராம், மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். தனது பட வேலைகளை தொடங்கிவிட்ட ராம், 'பேரன்பை' போலவே, தனது இந்தப் படத்திலும், மலையாள ஹீரோவுடன்தான் இணைய இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்தவகையில், இந்த முறை நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்குநர் ராம் படம் எடுக்க இருக்கிறார் என்று தமிழ் திரைத்துறையின் பி.ஆர்.ஓ நிகில் முருகன் தகவல் தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. அந்த அறிவிப்பில், படத்தில் வேறு யாரெல்லாம் இணைகிறார்கள் என்ற விவரம் வெளியாகுமாம். தமிழில், நிவின் பாலி கடைசியாக 'ரிச்சி' என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தொடர்ந்து மலையாள படங்களில் மட்டுமே நடித்தார். அப்படி தற்போது 'மஹாவீர்யார்' என்ற மலையாள படத்தில் பிஸியாக இருக்கிறார் அவர். அந்தப் படங்களுக்கான படப்பிடிப்புகள் முடிந்த பிறகு, ராம் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
'பேரன்பு' படத்துக்குப் பின், இயக்குநர் ராம், நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து இருமொழி படமொன்றை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் படக்குழுவினர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ராம் இயக்கத்தில், சில ஆண்டுகளுக்கு முன் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி, நடிகை அஞ்சலி, சிறுமி, சாதனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருந்த படம் 'பேரன்பு'. இந்தப் படத்துக்குப் பின், நடிப்பில் கவனம் செலுத்திய ராம், படங்கள் இயக்காமல் இருந்தார். அப்படி, கடைசியாக மிஷ்கின் இயக்கிய 'சைக்கோ' படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார் அவர். ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட 'பேரன்பு' படத்தில், கேரளாவை சேர்ந்த திருநங்கை அஞ்சலி அமீர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் தற்போது ராம், மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். தனது பட வேலைகளை தொடங்கிவிட்ட ராம், 'பேரன்பை' போலவே, தனது இந்தப் படத்திலும், மலையாள ஹீரோவுடன்தான் இணைய இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்தவகையில், இந்த முறை நடிகர் நிவின் பாலியை வை...

நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்! பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக #IStandWithSiddharth என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நடிகர் சித்தார்த் அண்மையில் கொரோனா தடுப்பூசி குறித்தும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்தும் ட்விட்டரில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இதன் காரணமாக நடிகர் சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவின் சார்பில் நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் சித்தார்த்தின் போன் நம்பரை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தார்த், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “என்னுடைய போன் நம்பரை பாஜகவினர் பரப்பிவிட்டுள்ளனர். எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் கால்கள் வருகின்றன. அவர்கள் பேசிய கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார். சித்தார்த்தின் இந்த பதிவுக்கு பலர் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அளவில் சித்தார்த்துக்கு ஆதரவாக #IStandWithSiddharth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக #IStandWithSiddharth என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நடிகர் சித்தார்த் அண்மையில் கொரோனா தடுப்பூசி குறித்தும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்தும் ட்விட்டரில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இதன் காரணமாக நடிகர் சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவின் சார்பில் நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் சித்தார்த்தின் போன் நம்பரை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தார்த், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “என்னுடைய போன் நம்பரை பாஜகவினர் பரப்பிவிட்டுள்ளனர். எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் கால்கள் வருகின்றன. அவர்கள் பேசிய கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார். சித்தார்த்தின் இந்த பதிவுக்கு பலர் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அளவில் சித்தார்த்துக்கு ஆதரவாக #IStandWithSiddh...