Posts

Showing posts from March, 2021

‘தலைவி’ படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியீடு! ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியாகிறது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தை ஏ.எல் விஜய் இயக்க நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி. ஆர். வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23 ஆம் தேதி படம் வெளியாகிறது. கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளையொட்டி ‘தலைவி’ படத்தின் ட்ரைலர் மார்ச் 23 ஆம் தேதி வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், தலைவி படத்தின் முதல் பாடலான ‘மழை மழை’ பாடல் நாளை மறுநாள் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகிறது. பாடலின் போஸ்டரும் புகைப்படங்களிலும் கலர்ஃபுல்லாக கங்கனா கவனம் ஈர்ப்பதால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியாகிறது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தை ஏ.எல் விஜய் இயக்க நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி. ஆர். வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23 ஆம் தேதி படம் வெளியாகிறது. கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளையொட்டி ‘தலைவி’ படத்தின் ட்ரைலர் மார்ச் 23 ஆம் தேதி வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், தலைவி படத்தின் முதல் பாடலான ‘மழை மழை’ பாடல் நாளை மறுநாள் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகிறது. பாடலின் போஸ்டரும் புகைப்படங்களிலும் கலர்ஃபுல்லாக கங்கனா கவனம் ஈர்ப்பதால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3wg9uvy via IFTTT

'18 ப்ளஸ் காட்சிதான் பிரச்னையா?'- தேசிய விருது வென்ற படத்துக்கு திரையில் முட்டுக்கட்டைகள் தேசிய விருது பெற்ற திரைப்படத்துக்கு கேரளாவில் தியேட்டர் அதிபர்களால் ஏற்பட்டுள்ள நிலைமை தற்போது சர்ச்சையாகி வருகிறது. சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழைப் போன்றே மலையாள திரையுலகை சேர்ந்த பல படங்கள் விருதுகளை அள்ளின. இதில் குறிப்பிடத்தக்க படம் 'பிரியாணி'. சஜின் பாபு என்பவர் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். சஜின் இதற்கு முன்னர் இரண்டு குறிப்பிடத்தக்க படங்களை இயக்கியுள்ளார் - 'அன்டோ தி டஸ்க்' மற்றும் 'அயல் சாஸி'. இவை இரண்டும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்கள். இவர் தற்போது இயக்கியுள்ள 'பிரியாணி' படம் ரோம் நகரில் நடந்த ஆசியடிகா திரைப்பட விழாவில் நெட்பாக் சிறந்த திரைப்பட விருது, பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி விருது மற்றும் பல விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது. இந்தப் படம், சமீபத்தில் முடிவடைந்த கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவிலும் (IFFK) திரையிடப்பட்டது. கேரளாவில் ஒரு முஸ்லிம் பெண்ணின் போராட்டத்தின் கதையைச் சொல்கிறது 'பிரியாணி படம்'. நடிப்பிற்காக சிறந்த பெண் நடிகருக்கான மாநில விருதை வென்ற கனி குஸ்ருதியால் மைய கதாபாத்திரமான கதீஜா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இதில் சிறப்பாக நடித்ததற்காக மாஸ்கோ திரைப்பட விழாவின் பிரிக்ஸ் போட்டி பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதையும் கனி வென்றுள்ளார். இந்த நிலையில், 'பிரியாணி' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை கேரளா முழுவதும் சுமார் 30 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இருப்பினும், பல திரையரங்கு உரிமையாளர்களும் மேலாளர்களும் படத்தைத் திரையிட மறுத்து வருகின்றனர். படத்தில் இருக்கும் சில காட்சிகள் காரணமாக திரையிட மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் இயக்குநர் சஜின் பாபு கவலையில் ஆழ்ந்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், ``படத்தைப் பார்க்க போதுமான பார்வையாளர்கள் இல்லாததால்தான் திரையிடவில்லை என்று கூறுகிறார்கள். இருப்பினும் இது உண்மை இல்லை. சுமார் 30 முதல் 40 பேர் இந்த சிறிய திரையரங்குகளுக்கு வருகிறார்கள். குறிப்பாக இப்போது கொரோனா காரணமாக தியேட்டர்களில் 50% மட்டுமே ஆட்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த எண்ணிக்கை ஒன்றும் மோசமான எண்ணிக்கை அல்ல. அரசாங்கத்தால் நடத்தப்படும் தியேட்டர்கள் திரையிடலை மறுக்கவில்லை, இது பெரும்பாலும் மலபார் பகுதியில் உள்ள ஒரு சில தனியார் திரையரங்குகள்தான் அனுமதி மறுத்துள்ளன. படத்துக்கு வரும் நபர்களிடம் தியேட்டர் மேலாளர் அல்லது உரிமையாளர்கள் படத்தில் இருக்கும் 18 ப்ளஸ் காட்சிகளை சொல்லி படம் பார்க்க வேண்டாம் என்று கூறி வருவதாக எனது நண்பர்கள் கூறுகிறார்கள். அவர்கள் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு படத்தை தீர்மானித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மத உள்ளடக்கத்தில் பிரச்னைகள் இல்லை. அவர்கள் படத்தை புரிந்து கொள்ளவில்லை அல்லது அவ்வாறு செய்ய முயற்சி எடுக்கவில்லை. திரைப்படத்தை திரையிட வேண்டாம் என்று தியேட்டர் அசோசியேஷனின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், நான் சங்கத்தை தொடர்பு கொண்டபோது, அத்தகைய நடவடிக்கை எதுவும் இல்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஒரு நெருங்கிய வட்டத்தினருடனான எங்கள் தொடர்புகளிலிருந்து, கேரளாவில் திரைப்படம் ஏற்றுக்கொள்ளப்படுவதில் எந்த பிரச்னையும் இருக்காது என்று எனக்குத் தோன்றியது. ஆனால் முற்போக்கான கருத்துகளை ஏற்றுக் கொள்ளும்போது நாம் இன்னும் பின் தங்கியுள்ளோம் என்பதை இது காட்டுகிறது. இதேபோன்று காட்சிகள் கொண்ட ஒரு வெளிநாட்டு படமோ அல்லது வெளிமாநில படமாக இருந்தால், அதே திரையரங்குகளில் சிக்கல் இல்லாமல் வெளியிடுகின்றனர். இருப்பினும் இதை ஒரு மலையாள படத்தில் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்" என்று வேதனை தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தேசிய விருது பெற்ற திரைப்படத்துக்கு கேரளாவில் தியேட்டர் அதிபர்களால் ஏற்பட்டுள்ள நிலைமை தற்போது சர்ச்சையாகி வருகிறது. சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழைப் போன்றே மலையாள திரையுலகை சேர்ந்த பல படங்கள் விருதுகளை அள்ளின. இதில் குறிப்பிடத்தக்க படம் 'பிரியாணி'. சஜின் பாபு என்பவர் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். சஜின் இதற்கு முன்னர் இரண்டு குறிப்பிடத்தக்க படங்களை இயக்கியுள்ளார் - 'அன்டோ தி டஸ்க்' மற்றும் 'அயல் சாஸி'. இவை இரண்டும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்கள். இவர் தற்போது இயக்கியுள்ள 'பிரியாணி' படம் ரோம் நகரில் நடந்த ஆசியடிகா திரைப்பட விழாவில் நெட்பாக் சிறந்த திரைப்பட விருது, பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி விருது மற்றும் பல விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது. இந்தப் படம், சமீபத்தில் முடிவடைந்த கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவிலும் (IFFK) திரையிடப்பட்டது. கேரளாவில் ஒரு முஸ்லிம் பெண்ணின் போராட்டத்தின் கதையைச் சொல்கிறது 'பிரியாணி படம்'. நடிப்பிற்காக சிறந்த பெண் நடிகருக்கான மாநில விருதை வென்ற கனி குஸ்ருதியால் மை...

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கில் இணைந்த நடிகர் யோகி பாபு! மலையாளத்தில் வெற்றியும் பாராட்டுகளையும் பெற்ற ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளார். சமீபத்தில் கருத்தியல் ரீதியில் தமிழ்ப் பரப்பிலும் அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படம், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இயக்குநர் ஜோ பேபி இயக்கிய இந்த சினிமா Neestream தளத்தில் வெளியானது. சலு கே தாமஸ் ஒளிப்பதிவு ,சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோரின் யதார்த்த நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் பலம். இந்தியாவைப் பொருத்தமட்டில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்தும், இந்தியப் பெண்களின் வாழ்வியல் சிக்கலையும் மிக அழுத்தமாக பதிவு செய்தது 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் கண்ணன் இயக்கி வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பாடகி சின்மயியின் கணவர் நடிகர் ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். கடந்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நடிகர் யோகி பாபு இப்படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். அவர் நடித்துள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மலையாளத்தில் வெற்றியும் பாராட்டுகளையும் பெற்ற ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளார். சமீபத்தில் கருத்தியல் ரீதியில் தமிழ்ப் பரப்பிலும் அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படம், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இயக்குநர் ஜோ பேபி இயக்கிய இந்த சினிமா Neestream தளத்தில் வெளியானது. சலு கே தாமஸ் ஒளிப்பதிவு ,சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோரின் யதார்த்த நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் பலம். இந்தியாவைப் பொருத்தமட்டில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்தும், இந்தியப் பெண்களின் வாழ்வியல் சிக்கலையும் மிக அழுத்தமாக பதிவு செய்தது 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் கண்ணன் இயக்கி வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பாடகி சின்மயியின் கணவர் நடிகர் ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். கடந்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நடிகர் யோகி பாபு இப்படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். அவர் நடித்துள...

மீண்டும் வெற்றிக் கூட்டணி... அமேசானில் வெளியாகும் ஃபஹத்தின் 'ஜோஜி'! நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான 'ஜோஜி' திரைப்படம், அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் ஃபஹத் 'பாசில் நடிப்பில், ஷியாம் புஷ்கரன் எழுதி திலீஷ் போதன் இயக்கி வெளியான திரைப்படம் 'மகேஷிண்டே பிரதிகாரம்'. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இத்திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதேநேரம் இந்தக் கூட்டணியும் அதிகமாக பேசப்பட்டது. எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் எழுதிய கதை, திலீஷ் போதன் இயக்கிய விதம், ஃபஹத்தின் நடிப்பு என அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததுதான் அதற்கு காரணம். இதன்பின் ஃபஹத்தும், திலீஷ் போதன் மட்டும் மீண்டும் இணைந்தனர். அந்தப் படம் 'தொண்டிமுதலும் திரிக்சாக்சியும்'. இந்தப் படத்துக்காக ஃபஹத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை சஜீவ் பாழூர் என்பவர் எழுதியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஃபஹத், திலீஷ் போதன், ஷியாம் புஷ்கரன் கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு 'ஜோஜி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஏப்ரல் 7 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் முதன்முதலில் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. அமேசான் ட்விட்டர் பக்கத்தில் படத்தின் டீசர் காட்சிகள் உடன் இந்த அறிவிப்பு வெளியானது. டீசர் காட்சிகளில் ஃபஹத் பாசில் நீண்ட நிமிடங்கள் மீன்பிடிக்கிறார், அழகிய இடங்களைச் சுற்றி நடந்து மீண்டும் மீன் பிடிக்க வருகிறார். அதோடு முடிகிறது. "உங்கள் கண்களின் குரல் உங்கள் பேச்சை விட ஆழமானது" என்று டீசருடன் அமேசான் பிரைம் வீடியோ வெளியிட்ட ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் கிரைம் திரில்லர் ட்ராமாவாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பேராசை, ஆசை, கொலை மற்றும் ரகசியங்கள் பற்றிய கதை இருக்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படத்தை ஃபஹத், திலீஷ் போதன், ஷியாம் புஷ்கரன் மூவரும் வைத்துள்ள பாவனா ஸ்டூடியோஸ் பெயரிலேயே தயாரித்துள்ளனர். ஏற்கெனவே இந்த பாவனா ஸ்டூடியோஸ் 'கும்பலங்கி நைட்ஸ்' படத்தை உருவாக்கி இருந்தது. இதற்கிடையே, ஃபஹத் நடிப்பில் ஏற்கெனவே 'இருள்' என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரின் சொந்த தயாரிப்பில் உருவான 'ஜோஜி' படத்தையும் மீண்டும் ஓடிடி-யில் ரிலீஸ் செய்வது அம்மாநில தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தி அலைகளை உருவாக்கியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான 'ஜோஜி' திரைப்படம், அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் ஃபஹத் 'பாசில் நடிப்பில், ஷியாம் புஷ்கரன் எழுதி திலீஷ் போதன் இயக்கி வெளியான திரைப்படம் 'மகேஷிண்டே பிரதிகாரம்'. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இத்திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதேநேரம் இந்தக் கூட்டணியும் அதிகமாக பேசப்பட்டது. எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் எழுதிய கதை, திலீஷ் போதன் இயக்கிய விதம், ஃபஹத்தின் நடிப்பு என அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததுதான் அதற்கு காரணம். இதன்பின் ஃபஹத்தும், திலீஷ் போதன் மட்டும் மீண்டும் இணைந்தனர். அந்தப் படம் 'தொண்டிமுதலும் திரிக்சாக்சியும்'. இந்தப் படத்துக்காக ஃபஹத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை சஜீவ் பாழூர் என்பவர் எழுதியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஃபஹத், திலீஷ் போதன், ஷியாம் புஷ்கரன் கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு 'ஜோஜி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஏப்ரல் 7 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் முதன்முதலில் வெளியாகிறது. ...

ஜிவி பிரகாஷ் - யோகி பாபு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவக்கம்! நடிகர் ஜிவி பிரகாஷ் - யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. ’குப்பத்து ராஜா.’, ‘செம’,’வாட்ச்மேன்’ என பல்வேறு படங்களில் ஜிவி பிரகாஷுடன் யோகி பாபு இணைந்து நடித்துள்ளார். ரசிகர்களிடம் இவர்கள் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளையும் கவனத்தையும் ஈர்த்த  ‘கன்னி மாடம்’ படத்தை தயாரித்த ரூபி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. விஷ்ணு வர்தனின் உதவி இயக்குநர் கெளஷிக் ராமலிங்கம் இப்படத்தை இயக்குகிறார் என்பதால் இன்னும் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. இன்று இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. நடிப்பதோடு இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் ஜிவி பிரகாஷ் - யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. ’குப்பத்து ராஜா.’, ‘செம’,’வாட்ச்மேன்’ என பல்வேறு படங்களில் ஜிவி பிரகாஷுடன் யோகி பாபு இணைந்து நடித்துள்ளார். ரசிகர்களிடம் இவர்கள் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளையும் கவனத்தையும் ஈர்த்த  ‘கன்னி மாடம்’ படத்தை தயாரித்த ரூபி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. விஷ்ணு வர்தனின் உதவி இயக்குநர் கெளஷிக் ராமலிங்கம் இப்படத்தை இயக்குகிறார் என்பதால் இன்னும் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. இன்று இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. நடிப்பதோடு இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2QLMwvO via IFTTT

‘உட்றாதீங்க எப்போவ்’; தீ குரலில் கவனம் ஈர்க்கும் ‘கர்ணன்’ படத்தின் நான்காம் பாடல்! தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் நான்காவது பாடலான ’உட்றாதீங்க எப்போவ்’ வெளியாகி இருக்கிறது. ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அண்மையில் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’ என்ற பாடல் வெளியாகி வைரல் ஹிட் அடித்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் வந்தது. அதனைத்தொடர்ந்து, வெளியானது இரண்டாவது பாடலான ‘மஞ்சனத்தி புராணம்’. தமிழ் சினிமாவில் இழவு வீட்டு பாடல்கள் எத்தனையோ இடம்பெற்றிருக்கின்றன. தர்மதுரை படத்தில் மக்க களங்குதைய்யா, மதயானை கூட்டம் படத்தில் உன்னை வணங்காத நாளில்லை என எல்லா பாடல்களுமே வீட்டில் மூத்தவர் யாரேனும் ஒருவர் இறந்திருப்பார் அவரைப்பற்றி இடம்பெற்ற பாடலாகவே அமைந்தது. ஆனால், மஞ்சனத்தி பாடல் என்பது இறந்த மனைவி மீதான தன் காதலை, பிரிவின் சோகத்தை கணவனே பாடுவது புதிதான ஒன்றுதான். இதனால் பாரட்டுகளை குவித்தது. மூன்றாம் பாடலான ‘திரெளபதையின் முத்தம்’ வெளியாகி வரவேற்பை பெற்றது. மூன்று பாடல்களும் வைரல் ஹிட் அடித்ததால் நான்காவது க்ளைமேக்ஸ் பாடலான கர்ணனின் யுத்தம் ’உட்றாதீங்க எப்போவ்’ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வெளியான மூன்று பாடல்களும் கிராமத்து பாணியில் வெளியான நிலையில், ’உட்றாதீங்க எப்போவ்’ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வெஸ்டர்ன் ஸ்டைலில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இப்பாடலை சந்தோஷ் நாராயணனும் அவரது மகள் தீ பாடி இருக்கிறார்கள். பாடுவதோடு சிறப்பு தோற்றத்தில் வந்து நடனம் ஆடி இன்னும் ஈர்க்கிறார் தீ.  பாடல் முழுக்க கைகளில் சங்கிலியும் கயிறுகளும் கட்டப்பட்ட நிலையில் காட்டப்படுவதால் அடிமைத்தன கைக்கட்டுகளை உடைத்தெறியும் வரை ’உட்றாதீங்க எப்போவ்’ என்பதை உணர்த்துகிறது கர்ணன் படத்தின் நான்காம் பாடல். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் நான்காவது பாடலான ’உட்றாதீங்க எப்போவ்’ வெளியாகி இருக்கிறது. ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அண்மையில் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’ என்ற பாடல் வெளியாகி வைரல் ஹிட் அடித்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் வந்தது. அதனைத்தொடர்ந்து, வெளியானது இரண்டாவது பாடலான ‘மஞ்சனத்தி புராணம்’. தமிழ் சினிமாவில் இழவு வீட்டு பாடல்கள் எத்தனையோ இடம்பெற்றிருக்கின்றன. தர்மதுரை படத்தில் மக்க களங்குதைய்யா, மதயானை கூட்டம் படத்தில் உன்னை வணங்காத நாளில்லை என எல்லா பாடல்களுமே வீட்டில் மூத்தவர் யாரேனும் ஒருவர் இறந்திருப்பார் அவரைப்பற்றி இடம்பெற்ற பாடலாகவே அமைந்தது. ஆனால், மஞ்சனத்தி பாடல் என்பது இறந்த மனைவி மீதான தன் காதலை, பிரிவின் சோகத்தை கணவனே பாடுவது புதிதான ஒன்றுதான். இதனால் பாரட்டுகளை குவித்தது. மூன்றாம் பாடலான ‘திரெளபதையின் முத்தம்’ வெளியாகி வரவேற்பை பெற்றது. மூன்று பாடல்களும் வைரல் ஹிட் அடித்ததால் நான்காவது க்ளைமேக்ஸ் பாடலான கர்ணனின் யுத்தம் ’உட்றாதீங்க எப்போவ்’ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறத...

`கொரோனா போன்ற தொற்றுகள் பரவ இதுதான் காரணம்!' - புதிய ஆய்வறிக்கை மனிதர்களுக்கு சொல்வது என்ன? கொரோனா பேரிடர்க்காலம் நீண்டுகொண்டே செல்கின்றது. இதுபோன்ற தொற்றுப் பரவல் அதிகரிப்பதற்கு அடிப்படைக் காரணமே காடழிப்பு, வேட்டை போன்ற நடவடிக்கைகள்தான் என்று சூழலியல் ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் தொடர்ந்து உரைத்துக்கொண்டேயிருக்க, சமீபத்தில் வெளியாகியுள்ள ஓர் ஆய்வறிக்கை அவர்களுடைய கூற்றை உண்மையென்று நிரூபித்திருக்கின்றது. காட்டுயிர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஓர் அரணாகச் செயல்படுவது இயற்கையாகப் பரந்து வளர்ந்திருக்கும் காடுகள்தான். அத்தகைய சூழலியல் அரணை அழித்துவிட்டு, பணப் பயிர்களை வளர்ப்பது கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் தீவிரமடைந்துள்ளது. காடழிப்பு உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சார்ஸ், மெர்ஸ், நிபா போன்ற வைரஸ் தொற்றுகளின் பரவலுக்கு இதுபோன்ற நடவடிக்கைகளும் முக்கியப் பங்கு வகிப்பதாக, உயிரின அறிவியல் ஆய்விதழான Frontiers in Veterinary Science என்ற ஆய்விதழில் மார்ச் 24-ம் தேதி வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகின்றது. 1990 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பரவிய டெங்கு போன்ற கொசுக்கள் மூலமாகப் பரவும் நோய்கள் மற்றும் காட்டு உயிரினங்களிட மிருந்து மனிதர்களுக்குப் பரவும் விலங்கியல் நோய்களுக்கு, காடழிப்பு நடவடிக்கைகளே முதன்மைக் காரணமாக இருப்பதாக இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது. தென் அமெரிக்காவில் காடழிப்பு நடவடிக்கைகளே, மலேரியா நோய்த் தாக்குதலைத் தொடங்கி வைத்தது. தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலும் அதேபோல் நிகழ்ந்த காடழிப்பு வேலைகளே A. dirus, A. minimus, A. balabacensis போன்ற மலேரியா நோயைப் பரப்பும் கொசுக்கள் மனிதர்களிடையே வருவதற்கு வழி உண்டாக்கிக் கொடுத்தது. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணி, பூஞ்சை போன்றவற்றால் ஏற்படும் நோய் எதுவாயிருப்பினும், அது ஓர் உயிரினத்திடமிருந்து மனிதர்களுக்குப் பரவினால், அதை விலங்கியல் நோய்கள் என்று குறிப்பிடுகின்றனர். கொரோனா தொற்றுப் பரவலும் அத்தகைய வழியில் நிகழ்ந்ததே என்பதால், அதுவும் விலங்கியல் நோயாகவே குறிப்பிடப்படுகின்றது. சரி, இப்போது இந்தத் தொற்று நோய்கள் மனிதர்களிடையே பரவுவதற்கும் காடுகள் அழிக்கப்படுவதற்கும் பணப் பயிர் தோட்டங்கள் அதிகரிப்பதற்கும் இடையே என்ன தொடர்பு? Megabat இதை ஓர் உதாரணத்தோடு புரிந்துகொள்ள முடியும். 1998-ம் ஆண்டின் இறுதியில், மலேசியாவின் போர்னியோ காட்டுப் பகுதியில் ஏற்பட்ட ஒரு காட்டுத்தீ, அங்கிருந்த பழந்தின்னி வௌவால்களை அருகிலிருக்கும் பழத்தோட்டங்களை நோக்கி இடம் பெயர வைத்தது. Megabats என்ற அந்தக் குறிப்பிட்ட பழந்தின்னி வௌவால் வகை, அப்படி இடம்பெயர்ந்து மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான தோட்டங்களுக்குள் வந்தபோது, அதன்மீது ஒட்டிக் கொண்டிருந்த அந்த வைரஸும் கூடவே வந்தது. 1997-98 ஆண்டுகளில் வேகமெடுத்த காகிதக் கூழ் மர வளர்ப்பு, பழ மரங்கள் வளர்ப்பு போன்ற பல்வேறு தொழில்சார் பண மரத்தோட்டங்கள், அந்த வௌவால் இனத்தின் வாழ்விடத்துக்கு ஏற்கெனவே பெரும் கேடுகளை விளைவித்துக் கொண்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகள், அந்தக் காட்டுப் பகுதியிலிருந்த பழ மரங்களில் நடக்கும் பூ பூப்பது, பழம் காய்ப்பது போன்ற செயல்பாடுகளைப் பாதிக்கவே, அதனால், பழந்தின்னி வௌவால்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. இதன் காரணமாக அவை, உணவு தேடி பழ மரத் தோட்டங்களுக்குள் அடிக்கடி வந்து செல்லத் தொடங்கின. இந்நிலையில், 1998-ம் ஆண்டு மீண்டும் அதேபோல் காட்டை அழித்து செயற்கையான மர வளர்ப்பில் ஈடுபடுவதற்கான வேலைகள் நடைபெற்றன. அதனால், தன் வாழ்விடத்தை இழந்த பழந்தின்னி வௌவால்கள் பழத் தோட்டங்களுக்கு வேறிடம் தேடிப் படையெடுத்தன. காட்டுத்தீ ஏற்கெனவே, பல்வேறு வழிகளில் உணவு தேடி மனிதர்களிடையே வந்துகொண்டிருக்கும் சூழலுக்கு வௌவால்கள் தள்ளப்பட்டிருந்தாலும்கூட, இந்தக் குறிப்பிட்ட செயல்பாடுதான், கால்நடைகளோடு வௌவால்களுக்கு தொடர்பு ஏற்படக் கிடைத்த முதல் வாய்ப்பாகச் சொல்லப்படுகிறது. அங்கு வந்த வௌவால்கள் சாப்பிட்டுவிட்டுப் போடும் பழங்களின் மிச்சத்தைச் சாப்பிட்ட வளர்ப்புப் பன்றிகளிடையே நிபா என்னும் கொடிய தொற்றுநோய் பரவியது. அதன் உடலில், அந்த வைரஸ் தொற்று பல்வேறு வளர்சிதை மாற்றங்களுக்கு உள்ளாகி, மனிதர்களைப் பாதிக்கக்கூடிய கொடிய நோயாக அப்பகுதி மக்களிடையே பரவியது. அதன்பின்னர், நிபா மனித சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களும் பாதிப்புகளும் நாம் அனைவரும் அறிந்ததே. நிபா வைரஸைப் பொறுத்தவரை, இன்று வரையுமே பலரும் அது பரவியதற்கு வௌவால்களே காரணம் என்ற கூற்றைக் குற்றச்சாட்டாக முன் வைக்கின்றனர். ஆனால், உண்மையில் அங்கு நிகழ்ந்த லாப நோக்கிலான பண மரப் பயிரிடுதலே, அவற்றுக்கு வாழ்விட இழப்பிற்கும் உணவுப் பற்றாக்குறைக்கும் வழி வகுத்தது. அதன் விளைவாகவே, அவை மனிதத் தோட்டங்களுக்குள் ஊடுருவத் தொடங்கின. அப்படி உணவு தேடி வந்தபோது ஏற்பட்ட சிக்கல்தான் நிபா தொற்றுப் பரவல். ஒருவேளை, அவற்றுடைய வாழ்விடமான இயற்கையான காடுகள்மீது லாப நோக்கத்தோடு கை வைக்காமலே இருந்திருந்தால், அவற்றுடைய வாழ்விடமும் பாதிக்கப்பட்டிருக்காது, மனித சமூகத்தில் நிபா என்னும் கொடிய தொற்று நோயும் பரவுவதற்கான வாய்ப்புகளும் குறைந்திருக்கும் நிலப்பயன்பாட்டில் நிகழும் மாற்றங்கள் நிபா வைரஸ் ஓர் உதாரணம் மட்டுமே. நிபா பரவ எப்படி காடழிப்பு காரணமாக இருந்ததோ, கொரோனா பரவ காட்டுயிர் கடத்தல் மற்றும் வன விலங்குச் சந்தை எப்படிக் காரணமாக அமைந்ததோ அதேபோல, விலங்கியல் தொற்று நோய் ஒவ்வொன்றுக்கும் ஏதாவதொரு வழியில் மனிதத் தலையீடுகள் முதன்மைக் காரணமாக இருப்பதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அதிலும், குறிப்பாக வெப்பமண்டலப் பகுதிகளில் நடக்கும் காடுகள் மீட்டுருவாக்கம் இத்தகைய தொற்றுப் பரவலுக்கு அதிகளவில் வழி வகுப்பதாக இந்த ஆய்வில் நிரூபிக்கப் பட்டுள்ளது. அதாவது, அழிக்கப்படும் இயற்கையான காடுகளுக்கு ஈடாக மீண்டும் புதியதாக ஒரு காட்டை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளின்போது, அதுவரை தொந்தரவு செய்யப்படாமலிருக்கும் பகுதிகளுக்குள் மனிதக் கால்தடம் பதிகின்றது. மேலும், காடுகள் மீட்டுருவாக்கம் என்பது அதிகளவில் நடப்பது என்னவோ புல்வெளிக் காடுகளில்தான். ஓரிடத்தில், அழிக்கப்படும் காட்டிற்கு ஈடாக, வேறோர் இடத்தில் புதிதாகக் காடு உருவாக்கப்படுகின்றது. ஆனால், அப்படிப்பட்ட வேலைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவது என்னவோ, புல்வெளிக் காடுகள்தான். Corona Vaccine மனித சமூகத்தின் பார்வையில், புல்வெளிக் காடுகள் என்பது பயன்பாடற்ற தரிசு நிலங்களே. அவற்றை, கட்டுமான வேலைகளுக்காகவோ, இதுபோன்ற காடு மீட்டுருவாக்கத்துக்காகவோ பயன்படுத்துகின்றனர். ஆனால், புல்வெளிக் காடுகளும் ஒரு தனித்துவமான சூழலியல் அமைப்பைக் கொண்டவை. புல்வெளிகள், திறந்தவெளிக் காடுகள், பாலை நிலங்கள் அழிக்கப்பட்டு அந்த நிலத்திற்கே தொடர்பில்லாத வகையில் மாற்றியமைக்கப்படும்போது, புதுப்புது விலங்கியல் நோய்கள் பரவக் காரணமாக அமைகிறது. இப்படி, இயற்கையான சூழலியல் அமைப்புகளை மனிதத் தலையீடுகள் குலைக்கும்போது, பல்வேறு தொற்றுநோய்கள் வெளியுலகத்தில் பரவுகின்றன. இதுபோன்ற உலகளவிலான ஆய்வு நடைபெறுவது இதுவே முதல்முறை. இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்கள், இதுபோன்ற தொற்றுப் பரவல்களுக்கு உதாரணமாக இத்தாலியில் பாதிப்பை உண்டாக்கிய என்செஃபாலிட்டிஸ் என்ற உண்ணிகளிலிருந்து தொடங்கிய நோய்ப்பரவலைக் குறிப்பிடுகின்றார்கள். அதேபோல், பனை எண்ணெய் உற்பத்திக்காக வளர்க்கப்படும் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைச் சுற்றி வாழும் மக்கள், டெங்கு, ஸிகா, சிக்கன்குன்யா, மஞ்சள் காமாலை போன்ற பல தொற்று நோய்களுக்கு ஆளாகின்றார்கள் என்பதை இந்த ஆய்வு முடிவு நிரூபித்துள்ளது. ஒற்றைப் பயிரிடுதல் முறை Also Read: `வௌவால்களே காரணம்; சீன ஆய்வகம் அல்ல!' - கொரோனா வைரஸ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த WHO ஒற்றைப் பயிர் வளர்ப்பு முறையில், ஒரேயொரு வகையான தாவரத்தை வளர்ப்பதில் தீவிரமாக ஈடுபடும்போது, அது நடைபெறும் நிலத்தின் இயல்புநிலையைக் குலைக்கிறது. இதனால், அப்பகுதியின் பல்லுயிரிய வளம் பாதிக்கப்படுவதோடு, சூழலியல் சமநிலையும் சீர்குலைகிறது. 1990 முதல் 2016 வரையிலான நாடு வாரியான தரவுகளைச் சேகரித்து மூன்று கட்டமாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, மனிதர்களிடையே பரவும் தொற்றுநோய்கள் அதிகரிப்பதற்கு மனிதத் தலையீடுகளால் நிகழும் சூழலியல் சீர்குலைவே காரணம் என்ற பன்னாட்டு ஆய்வாளர்களின் கூற்றை உறுதி செய்துள்ளது. மேலும், இந்த நிலை இப்படியே நீடித்தால், மற்ற உயிரினங்களின் வாழ்விடங்களில் தொடர்ந்து ஊடுருவிக் கொண்டும் அழித்துக்கொண்டுமிருக்கும் மனிதர்கள், தங்களுக்கெனப் பாதுகாப்பான வாழ்விடமின்றித் தவிக்க நேரிடும் என்ற எச்சரிக்கையையும் இந்த ஆய்வுமுடிவுகள் கொடுத்துள்ளன.

Image
கொரோனா பேரிடர்க்காலம் நீண்டுகொண்டே செல்கின்றது. இதுபோன்ற தொற்றுப் பரவல் அதிகரிப்பதற்கு அடிப்படைக் காரணமே காடழிப்பு, வேட்டை போன்ற நடவடிக்கைகள்தான் என்று சூழலியல் ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் தொடர்ந்து உரைத்துக்கொண்டேயிருக்க, சமீபத்தில் வெளியாகியுள்ள ஓர் ஆய்வறிக்கை அவர்களுடைய கூற்றை உண்மையென்று நிரூபித்திருக்கின்றது. காட்டுயிர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஓர் அரணாகச் செயல்படுவது இயற்கையாகப் பரந்து வளர்ந்திருக்கும் காடுகள்தான். அத்தகைய சூழலியல் அரணை அழித்துவிட்டு, பணப் பயிர்களை வளர்ப்பது கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் தீவிரமடைந்துள்ளது. காடழிப்பு உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சார்ஸ், மெர்ஸ், நிபா போன்ற வைரஸ் தொற்றுகளின் பரவலுக்கு இதுபோன்ற நடவடிக்கைகளும் முக்கியப் பங்கு வகிப்பதாக, உயிரின அறிவியல் ஆய்விதழான Frontiers in Veterinary Science என்ற ஆய்விதழில் மார்ச் 24-ம் தேதி வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகின்றது. 1990 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பரவிய டெங்கு போன்ற கொசுக்கள் மூலமாகப் பரவும் நோய்கள் மற்றும் காட்டு உயிரினங்களிட மிருந்து மனிதர்க...

”கர்ணன் வருவான்; சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்” - தனுஷ் நெகிழ்ச்சி! ’தி கிரே மேன்’ படப்பிடிப்பில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருக்கும் தனுஷ் இன்று நடந்த தனது ’கர்ணன்’ பாடல் வெளியீட்டு விழாவிற்கு வரமுடியாததால் நெகிழ்ச்சியுடன் நன்றி அறிக்கை ஒன்றை படக்குழுவினருக்கு அனுப்பி இருக்கிறார். அதில், “உங்களுடன் இப்போது இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாகவே இருந்திருப்பேன். சீக்கிரம் வருவேன். கர்ணன் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நான் ஸ்பெஷலா நினைக்கிற நிறைய பேர் இந்தப் படத்துல இருக்காங்க. இந்தப் படம் எனக்கு ஒரு நடிகனா மனிதனா நிறைய விஷயங்களை கத்துக்கொடுத்துச்சு. மாரி செல்வராஜோட உறுதியும் அவரோட மனிதநேயமும் தினந்தினம் ஒரு சர்ப்ரைசாக இருந்தது. மாரி மாதிரி ஒரு நல்ல மனிதநேயனா இருக்க முடியுமான்னு நான் அடிக்கடி யோசிப்பேன். என்னை உங்க கர்ணனா மாத்துனதுக்கும் என் லைஃப்ல நீங்க வந்ததுக்கும் ரொம்ப நன்றி மாரி. எப்பவும் இப்படியே இருங்க. உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான இடம் காத்திட்டிருக்கு. என்னையும் நான் தேர்ந்தெடுக்கிற கதையையும் அவ்ளோ நம்புற தாணு சார்க்கு என் நன்றி. கர்ணன் உங்க எல்லோரையும் சந்தோஷப்படுத்தும்னு நம்புறேன். கர்ணன் வருவான். சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்” என்று படத்தில் பணியாற்றிய சக நடிகர்களுக்கும் இசையமைப்பாளருக்கும் படக்குழுவினருக்கும் சேர்த்து நன்றிகளை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
’தி கிரே மேன்’ படப்பிடிப்பில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருக்கும் தனுஷ் இன்று நடந்த தனது ’கர்ணன்’ பாடல் வெளியீட்டு விழாவிற்கு வரமுடியாததால் நெகிழ்ச்சியுடன் நன்றி அறிக்கை ஒன்றை படக்குழுவினருக்கு அனுப்பி இருக்கிறார். அதில், “உங்களுடன் இப்போது இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாகவே இருந்திருப்பேன். சீக்கிரம் வருவேன். கர்ணன் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நான் ஸ்பெஷலா நினைக்கிற நிறைய பேர் இந்தப் படத்துல இருக்காங்க. இந்தப் படம் எனக்கு ஒரு நடிகனா மனிதனா நிறைய விஷயங்களை கத்துக்கொடுத்துச்சு. மாரி செல்வராஜோட உறுதியும் அவரோட மனிதநேயமும் தினந்தினம் ஒரு சர்ப்ரைசாக இருந்தது. மாரி மாதிரி ஒரு நல்ல மனிதநேயனா இருக்க முடியுமான்னு நான் அடிக்கடி யோசிப்பேன். என்னை உங்க கர்ணனா மாத்துனதுக்கும் என் லைஃப்ல நீங்க வந்ததுக்கும் ரொம்ப நன்றி மாரி. எப்பவும் இப்படியே இருங்க. உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான இடம் காத்திட்டிருக்கு. என்னையும் நான் தேர்ந்தெடுக்கிற கதையையும் அவ்ளோ நம்புற தாணு சார்க்கு என் நன்றி. கர்ணன் உங்க எல்லோரையும் சந்தோஷப்படுத்தும்னு நம்புறேன். கர்ணன் வருவான். சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்” என்று ப...

விஜய்யின் ’தளபதி 65’ படத்தில் இணைந்த ’பிக்பாஸ்' கவின்! விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ’மாஸ்டர்’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கிறார். பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இன்று இப்படத்தின் பூஜைப் படங்கள் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளன. இந்நிலையில், இப்படத்தில் ’பிக்பாஸ்’ புகழ் கவின் இணைந்துள்ளார். ’சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் தனது தனித்துவ நடிப்பால் கவனம் ஈர்த்த கவின், பிக்பாஸ் மூலம் புகழடைந்தார். ஏற்கனவே, ’நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது வினீத் இயக்கத்தில் ‘லிஃப்ட்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ள கவின், அடுத்ததாக ’தளபதி 65’ படத்தில் இணைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை நிரூபிக்கும் விதமாக இன்று நடந்த பூஜையிலும் விஜய்யுடன் கவின் கலந்துகொண்ட புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கவின் இப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்றும் விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. நடிகர் கவின் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள ’டாக்டர்’ படத்தில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து வருகிறார் என்று சொல்லப்படுகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்குநராவதற்கு முன்பே விஜய் டிவியில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவினும் விஜய் டிவி சீரியல் நிகழ்ச்சிகளில் பணிபுரிந்தார். அந்த நட்புதான் தளபதி 65 படத்தில் இணைய வைத்துள்ளது என்று சொல்லப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ’மாஸ்டர்’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கிறார். பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இன்று இப்படத்தின் பூஜைப் படங்கள் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளன. இந்நிலையில், இப்படத்தில் ’பிக்பாஸ்’ புகழ் கவின் இணைந்துள்ளார். ’சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் தனது தனித்துவ நடிப்பால் கவனம் ஈர்த்த கவின், பிக்பாஸ் மூலம் புகழடைந்தார். ஏற்கனவே, ’நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது வினீத் இயக்கத்தில் ‘லிஃப்ட்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ள கவின், அடுத்ததாக ’தளபதி 65’ படத்தில் இணைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை நிரூபிக்கும் விதமாக இன்று நடந்த பூஜையிலும் விஜய்யுடன் கவின் கலந்துகொண்ட புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கவின் இப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்றும் விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. நடிகர் கவின் ...

இந்தியில் வெளியாகும் ’சூரரைப் போற்று’ - ரிலீஸ் தேதி, டைட்டில் அறிவிப்பு சூர்யா நடிப்பில் பாராட்டுக்களை குவித்த ‘சூரரைப் போற்று’ படம் இந்தியில் ‘உடான்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில், தீபாவளியையொட்டி வெளியான ’சூரரைப் போற்று’ சூப்பர் ஹிட் அடித்தது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இருந்து சிலப் பகுதிகளை எடுத்துக்கொண்டு தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்ட்டு அங்கும் கொண்டாடப்பட்டது. சினிமாத்துறையினர் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அரசு துறையினர், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் பாராட்டித் தள்ளினார்கள். அபர்ணா பாலமுரளியின் நடிப்பும் ஜி.வி பிரகாஷின் இசையும் மேலும் படத்திற்கு பலம் சேர்த்தது. இதனால், ஆஸ்காருக்கு போட்டியிட்ட படங்களின் பட்டியலிலும் சூரரைப் போற்று இடம் பிடித்ததது. சூர்யா தயாரித்த இப்படம் அமேசான் பிரைமில் படம் வெளியான நிலையில், தற்போது, இந்தியில் ‘உடான்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ’சூரரைப் போற்று’ வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. இதனால், சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சூர்யா நடிப்பில் பாராட்டுக்களை குவித்த ‘சூரரைப் போற்று’ படம் இந்தியில் ‘உடான்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில், தீபாவளியையொட்டி வெளியான ’சூரரைப் போற்று’ சூப்பர் ஹிட் அடித்தது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இருந்து சிலப் பகுதிகளை எடுத்துக்கொண்டு தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்ட்டு அங்கும் கொண்டாடப்பட்டது. சினிமாத்துறையினர் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அரசு துறையினர், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் பாராட்டித் தள்ளினார்கள். அபர்ணா பாலமுரளியின் நடிப்பும் ஜி.வி பிரகாஷின் இசையும் மேலும் படத்திற்கு பலம் சேர்த்தது. இதனால், ஆஸ்காருக்கு போட்டியிட்ட படங்களின் பட்டியலிலும் சூரரைப் போற்று இடம் பிடித்ததது. சூர்யா தயாரித்த இப்படம் அமேசான் பிரைமில் படம் வெளியான நிலையில், தற்போது, இந்தியில் ‘உடான்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ’சூரரைப் போற்று’ வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. இதனால், சூர்யா ர...

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் 'எனிமி' படத்தின் புதிய அப்டேட்! விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் 'எனிமி' படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’ திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் விஷால், ஆர்யா இருவரும் போட்டிக்கொண்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். ’அவன் இவன்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஷால், ஆர்யா மீண்டும் இணைந்து நடிக்கும் ’எனிமி’ திரைப்படம் விஷாலின் 30 வது படமாகவும் ஆர்யாவின் 32 வது படமாகவும் வெளியாகவிருக்கிறது. இருவருமே நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், 9 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ’எனிமி’ படத்தில் இணைந்துள்ளனர். விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். இயக்குநர் ஆனந்த் சங்கர் ஏற்கனவே, கடந்த 2014 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் ‘அரிமா நம்பி’, 2016 ஆம் ஆண்டு விக்ரம், நயன்தாரா நடிப்பில் ‘இருமுகன்’, 2018 ஆம் ஆண்டு விஜய் தேவாரகொண்டா நடிப்பில் ‘நோட்டா’ படங்களை இயக்கியிருந்தார். விஷாலுக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் 30 நாட்கள் படப்பிடிப்பு துபாயில் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக க்ளைமேக்ஸ் காட்சிகள் சென்னையில் நடைபெறவுள்ளன என்று தயாரிப்பு நிறுவனம் அப்டேட் கொடுத்திருக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத், துபாயில் தொடர்ந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெறவுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் 'எனிமி' படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’ திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் விஷால், ஆர்யா இருவரும் போட்டிக்கொண்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். ’அவன் இவன்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஷால், ஆர்யா மீண்டும் இணைந்து நடிக்கும் ’எனிமி’ திரைப்படம் விஷாலின் 30 வது படமாகவும் ஆர்யாவின் 32 வது படமாகவும் வெளியாகவிருக்கிறது. இருவருமே நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், 9 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ’எனிமி’ படத்தில் இணைந்துள்ளனர். விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். இயக்குநர் ஆனந்த் சங்கர் ஏற்கனவே, கடந்த 2014 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் ‘அரிமா நம்பி’, 2016 ஆம் ஆண்டு விக்ரம், நயன்தாரா நடிப்பில் ‘இருமுகன்’, 2018 ஆம் ஆண்டு விஜய் தேவாரகொண்டா நடிப்பில் ‘நோட்டா’ படங்களை இயக்கியிருந்தார். விஷாலுக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் 30 நாட்கள் படப்பிடிப்பு துபாயில் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ...

விஜய்65 பட பூஜை - வைரலாகும் நடிகர் விஜய் புகைப்படங்கள் சென்னையில் நடைபெற்ற விஜய்65 படத்தின் பூஜையில் விஜய் கலந்துகொண்டார்.  நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் விஜய் 65 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தப்புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.   Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சென்னையில் நடைபெற்ற விஜய்65 படத்தின் பூஜையில் விஜய் கலந்துகொண்டார்.  நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் விஜய் 65 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தப்புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.   Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3fuFKFk via IFTTT