சைலண்ட்டாக நடந்து முடிந்த ‘ஏகே 62’ படப்பூஜை? - இவர்தான் வில்லனா? அறிவிப்பில் தாமதம் ஏன்? நடிகர் அஜித்தின் ‘ஏகே 62’ படப் பூஜை நேற்று சைலண்ட்டாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘துணிவு’. இந்தப் படம் அஜித்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல கம்பேக் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவிலிருந்து அஜித் புகைப்படம் மற்றும் ‘ஏகே62’ என குறிப்பிட்டதை நீக்கிவிட்டார். இதனால் விக்னேஷ் சிவன் ‘ஏகே 62’ படத்திலிருந்து வெளியேறியதை சூசகமாக கூறியுள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அடுத்ததாக அஜித் படத்தை இயக்கப்போவதாக வெளியான லிஸ்ட்டில் விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, மகிழ் திருமேனி ஆகிய இயக்குநர்களின் பெயர்கள் சமூகவலைத்தளங்களில் அடிப்பட்டன. இதில் இயக்குநர் மகிழ் திருமேனி சொன்ன கதை பிடித்துவிட்டதாகவும், அஜித் அவரையே தேர்வு செய்துவிட்டதாகவும் செய்திகள் உலா வந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட்டாக, எளிமையாகவும், சைலண்ட் ஆகவும் அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் பூஜை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஏகே 62’ படத்தில் அனிருத் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. லைகா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படும் இந்தப் படத்தில் அஜித்திற்கு வில்லனாக அருண் விஜய் அல்லது அருள்நிதி ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் அருண் விஜய் ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்திற்கு நண்பனாகவும், வில்லனாகவும் அருண் விஜய் மிரட்டியிருந்தார். ‘ஏகே 62’ படத்தில் ஒருவேளை இணைந்தால், அஜித் - அருண் விஜய் இணையும் இரண்டாவது படமாக அது அமையும். மேலும், அருண் விஜய், மகிழ் திருமேனியின் ‘தடையறத் தாக்க’ படத்திலும், ‘தடம்’ படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளதால், கூடுதல் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கிரிப்டில் கூடுதல் ஆக்ஷன் காட்சிகள் சேர்க்க அஜித் வலியுறுத்தியுள்ளதாகவும், அதனால் மீண்டும் கதை எழுதுவதில் தாதமம் ஆகி வருவதால், மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் அல்லது இறுதியில் டைட்டிலுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், அப்போது படப்பிடிப்பு துவங்கி அடுத்த ஆண்டு 2024 பொங்கலை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ் திருமேனியை ட்ரெண்டாக்கி வருகின்றனர். அத்துடன் 'Done Channel' என்ற பிரபலங்களுக்கான மக்கள் தொடர்பு  நிறுவனம், இயக்குநர் மகிழ் திருமேனிக்கு எந்த சமூகவலைத்தளம் கணக்கும் இல்லையென்றும், அதனால் ரசிகர்களின் போலியான கணக்குகளை துவங்கி அவரது பெயரில் எந்த போஸ்ட்டுகளும் பதிவுசெய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது. இதனையும் அஜித் ரசிகர்கள் 'Code word accepted' என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.  Code word accepted — ֆʊʀʏǟ  (@Rascal_AK) February 21, 2023 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் அஜித்தின் ‘ஏகே 62’ படப் பூஜை நேற்று சைலண்ட்டாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘துணிவு’. இந்தப் படம் அஜித்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல கம்பேக் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவிலிருந்து அஜித் புகைப்படம் மற்றும் ‘ஏகே62’ என குறிப்பிட்டதை நீக்கிவிட்டார்.

image

இதனால் விக்னேஷ் சிவன் ‘ஏகே 62’ படத்திலிருந்து வெளியேறியதை சூசகமாக கூறியுள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அடுத்ததாக அஜித் படத்தை இயக்கப்போவதாக வெளியான லிஸ்ட்டில் விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, மகிழ் திருமேனி ஆகிய இயக்குநர்களின் பெயர்கள் சமூகவலைத்தளங்களில் அடிப்பட்டன. இதில் இயக்குநர் மகிழ் திருமேனி சொன்ன கதை பிடித்துவிட்டதாகவும், அஜித் அவரையே தேர்வு செய்துவிட்டதாகவும் செய்திகள் உலா வந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட்டாக, எளிமையாகவும், சைலண்ட் ஆகவும் அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் பூஜை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

image

‘ஏகே 62’ படத்தில் அனிருத் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. லைகா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படும் இந்தப் படத்தில் அஜித்திற்கு வில்லனாக அருண் விஜய் அல்லது அருள்நிதி ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் அருண் விஜய் ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்திற்கு நண்பனாகவும், வில்லனாகவும் அருண் விஜய் மிரட்டியிருந்தார். ‘ஏகே 62’ படத்தில் ஒருவேளை இணைந்தால், அஜித் - அருண் விஜய் இணையும் இரண்டாவது படமாக அது அமையும்.

image

மேலும், அருண் விஜய், மகிழ் திருமேனியின் ‘தடையறத் தாக்க’ படத்திலும், ‘தடம்’ படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளதால், கூடுதல் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கிரிப்டில் கூடுதல் ஆக்ஷன் காட்சிகள் சேர்க்க அஜித் வலியுறுத்தியுள்ளதாகவும், அதனால் மீண்டும் கதை எழுதுவதில் தாதமம் ஆகி வருவதால், மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் அல்லது இறுதியில் டைட்டிலுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், அப்போது படப்பிடிப்பு துவங்கி அடுத்த ஆண்டு 2024 பொங்கலை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ் திருமேனியை ட்ரெண்டாக்கி வருகின்றனர். அத்துடன் 'Done Channel' என்ற பிரபலங்களுக்கான மக்கள் தொடர்பு  நிறுவனம், இயக்குநர் மகிழ் திருமேனிக்கு எந்த சமூகவலைத்தளம் கணக்கும் இல்லையென்றும், அதனால் ரசிகர்களின் போலியான கணக்குகளை துவங்கி அவரது பெயரில் எந்த போஸ்ட்டுகளும் பதிவுசெய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது. இதனையும் அஜித் ரசிகர்கள் 'Code word accepted' என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/ARHxUmQ
via IFTTT

Comments

Popular posts from this blog

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை... ஏன்? நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM