`ச்ச... என்னா மனுஷன்யா’- அப்டேட்களைத் வாரி வழங்கிய தளபதி 67 படக்குழு! குஷியில் ரசிகர்கள்! நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இன்று ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டது. அதில், பெரிய நடிகர் பட்டாளங்களையே அறிவித்துள்ளது படக்குழு. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இன்று வெளியாகியுள்ள அப்டேட்களை  மட்டும், இந்தத் தொகுப்பில் பார்ப்போம். 'வாரிசு' படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’தளபதி 67’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இம்மூவரும் 2வது முறையாகக் கூட்டணி அமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. அதேநேரத்தில், ‘தளபதி 67’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை (ஜனவரி 30) வெளியானது. ’விஜய் அண்ணாவுடன் மீண்டும் இணைகிறேன்’ என இயக்குநர் லோகேஷ் கனகராஜும், ’தளபதி விஜய்யுடன் மீண்டும் தளபதி 67ல் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது’ என செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, ரசிகர்கள் மத்தியில் இப்பதிவுகள் வைரலாகின. Good evening guys! More than happy to join hands with @actorvijay na once again #Thalapathy67 pic.twitter.com/4op68OjcPi — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 30, 2023 அத்துடன், இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்களை படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்தனர். அதோடு ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர் எனவும் தெரிவித்தது. இந்த நிலையில், காஷ்மீரில் நடைக்கும் இரண்டாவதுகட்ட படப்பிடிப்புக்காக ‘தளபதி 67’ படக்குழுவினர் இன்று (ஜனவரி 31) காலை தனி விமானத்தில் சென்றுள்ளனர். இதனை படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் விமான டிக்கெட்டுடன் பகிர்ந்து இருந்தார். அத்துடன், ‘தளபதி 67’ படத்தில் இணைந்து பணியாற்றும் நடிகர்களையும் படத் தயாரிப்பு நிறுவனம், இன்று அடுத்தடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அதன்படி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இளம் நடிகர் மேத்யூ தாமஸ், பழைய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் பெயர்களை அடுத்தடுத்து வெளியிட்ட பட நிறுவனம், இறுதியாக இயக்குநர் மற்றும் நடிகர்களான கெளதம் வாசுதேவ மேனன், அர்ஜுன் ஆகியோர் பெயர்களை வெளியிட்டு, ‘இத்துடன் இன்றைய ‘தளபதி 67’ அப்டேட்ஸ் முடிவு அடைகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது. Guess paniteenga nu theriyum, but first time kekra mari nenachikonga nanba @PriyaAnand is officially part of #Thalapathy67 now #Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/5cdFu5MtjN — Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023 'தளபதி 67’ படத்தில் இணைந்தது குறித்து சஞ்சய் தத், “படத்தின் ஒன்லைன் கேட்டபோதே, இந்தப் படத்தின் ஒரு பகுதியாக நானும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதற்குச் சரியான தருணம் இதுதான் என்று தோன்றியது. தளபதி 67 பயணம் குறித்து மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கூறியதாக படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது. நடிகை பிரியா ஆனந்த், "தளபதி 67 படத்தில் நடிப்பது த்ரில்லாக உள்ளது. ஒரு அற்புதமான படக்குழுவினருடன் பணிபுரிவதை எதிர்நோக்கி உள்ளேன்" எனவும், நடன இயக்குநர் சாண்டி, “இது ஒரு ஸ்பெஷல் ஃபீலிங். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தில் நான் நடிப்பது எனக்கே ஒரு புது அனுபவமாக உள்ளது. தளபதி விஜய் சார் உடன் நடிக்க உள்ளதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” எனவும் கூறியிருப்பதாகப் படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Expect the unexpected from Team #Thalapathy67 Actor @iamSandy_Off joins the cast of Thalapathy 67 Inaiki full ah update mela update dhan #Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/BchtQ9IU6Z — Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023 அதுபோல் இயக்குநர் மிஷ்கின், “21 வருடங்களுக்கு முன் விஜய் நடித்த படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தேன். இத்தனை வருடங்களில் ஒரு விஷயம் மாறாமல் உள்ளது. அது விஜய்க்கும் எனக்கும் உள்ள பிணைப்பு. Yes, it’s official now! We are happy to announce Director #Mysskin sir is part of #Thalapathy67 #Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/Zn44BqkN5N — Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023 இந்த பிணைப்புடன் லோகேஷ் கனகராஜூக்கு என் மீதும் எனக்கு அவர் மீதும் உள்ள பரஸ்பர அன்பும் மரியாதையும் என்னை ஆர்வம் கொள்ளச் செய்கிறது. தளபதி 67 படத்தினை உங்களோடு தியேட்டரில் காண ஆர்வமாக உள்ளேன்" என அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான், “யாணும் இணைந்தேன். தளபதி 67இல் லோகேஷ் நீ ஆர்ப்பரித்து எழு; திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே” என அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளார். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், “இந்த நேரத்தில் கேமரா முன் மற்றும் திரைத்துறையில் கைதேர்ந்தவர்களுடன் தோள்சேர்ந்து நிற்கிறேன். Hi nanba, naanga idha solliye aaganum, en na @menongautham sir is part of #Thalapathy67 #Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/4m2z9JxEgv — Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023 தளபதி 67ல் தானும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி” எனவும், இயக்குநரும் நடிகருமான அர்ஜுன், ”ஒரு அற்புதமான கேப்டனால் (லோகேஷ் கனகராஜ்) வழிநடத்தப்படும் கப்பலில் ஏறுகிறேன்” எனவும் அந்த போஸ்டர்களில் குறிப்பிட்டுள்ளனர். And Finally ACTION KING @akarjunofficial on board #Thalapathy67 pic.twitter.com/UdjVJx2l0f — Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023 இந்த அப்டேட் மழையை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம், “இத்துடன் இன்றைய தளபதி 67 அப்டேட்ஸ் முடிவடைகிறது! நாளை சந்திப்போம்” எனக்குறிப்பிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை நடிகை த்ரிஷா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் படத்திலிருப்பது பற்றிய அப்டேட்ஸ் வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த தொடர் அறிவுப்புகளால் ரசிகர்கள் விஜய் உற்சாகத்தில் உள்ளனர். Ithudan indraya #Thalapathy67 updates mudivu adaikirathu Naalai santhipom — Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023 ஒரு ரசிகை, “இன்னைக்கு அறிவிச்சவங்களாம், படத்தில் ஒரு தரப்பு போல” என்றுள்ளார். இன்னொருவர், “நாங்க வெயிட் பண்ணுவோம்னு தெரிஞ்சு, இன்னைக்கு அப்டேட் முடிஞ்சிருச்சுனு சொல்றீங்க பாத்தீங்களா... அண்ணா, நீங்க எங்க ஆளு அண்ணா” என்றுள்ளார். இன்னொருவரோ “என்னா மனுஷன்யா” என போட்டுள்ளார். Enna manushan yaa — (@MasterS_a_r_a_n) January 31, 2023 Naanga wait panuvom nu therinju thoonga solra pathiya .. Annaa ne enga aalu naa #Thalapathy67 — (@CeoAbdul__17) January 31, 2023 தொடர்ந்து பலரும் த்ரிஷா பற்றிய அறிவிப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். Trisha poster mattum vittutu po Ney pic.twitter.com/4UCkog6nUb — மைக்கெல் மதன் (@Michael_Madhan2) January 31, 2023 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இன்று ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டது. அதில், பெரிய நடிகர் பட்டாளங்களையே அறிவித்துள்ளது படக்குழு. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இன்று வெளியாகியுள்ள அப்டேட்களை  மட்டும், இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

'வாரிசு' படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’தளபதி 67’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இம்மூவரும் 2வது முறையாகக் கூட்டணி அமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

அதேநேரத்தில், ‘தளபதி 67’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை (ஜனவரி 30) வெளியானது. ’விஜய் அண்ணாவுடன் மீண்டும் இணைகிறேன்’ என இயக்குநர் லோகேஷ் கனகராஜும், ’தளபதி விஜய்யுடன் மீண்டும் தளபதி 67ல் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது’ என செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, ரசிகர்கள் மத்தியில் இப்பதிவுகள் வைரலாகின.

அத்துடன், இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்களை படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்தனர். அதோடு ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர் எனவும் தெரிவித்தது.

image

இந்த நிலையில், காஷ்மீரில் நடைக்கும் இரண்டாவதுகட்ட படப்பிடிப்புக்காக ‘தளபதி 67’ படக்குழுவினர் இன்று (ஜனவரி 31) காலை தனி விமானத்தில் சென்றுள்ளனர். இதனை படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் விமான டிக்கெட்டுடன் பகிர்ந்து இருந்தார். அத்துடன், ‘தளபதி 67’ படத்தில் இணைந்து பணியாற்றும் நடிகர்களையும் படத் தயாரிப்பு நிறுவனம், இன்று அடுத்தடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இளம் நடிகர் மேத்யூ தாமஸ், பழைய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் பெயர்களை அடுத்தடுத்து வெளியிட்ட பட நிறுவனம், இறுதியாக இயக்குநர் மற்றும் நடிகர்களான கெளதம் வாசுதேவ மேனன், அர்ஜுன் ஆகியோர் பெயர்களை வெளியிட்டு, ‘இத்துடன் இன்றைய ‘தளபதி 67’ அப்டேட்ஸ் முடிவு அடைகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

'தளபதி 67’ படத்தில் இணைந்தது குறித்து சஞ்சய் தத், “படத்தின் ஒன்லைன் கேட்டபோதே, இந்தப் படத்தின் ஒரு பகுதியாக நானும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதற்குச் சரியான தருணம் இதுதான் என்று தோன்றியது. தளபதி 67 பயணம் குறித்து மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கூறியதாக படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.

image

நடிகை பிரியா ஆனந்த், "தளபதி 67 படத்தில் நடிப்பது த்ரில்லாக உள்ளது. ஒரு அற்புதமான படக்குழுவினருடன் பணிபுரிவதை எதிர்நோக்கி உள்ளேன்" எனவும், நடன இயக்குநர் சாண்டி, “இது ஒரு ஸ்பெஷல் ஃபீலிங். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தில் நான் நடிப்பது எனக்கே ஒரு புது அனுபவமாக உள்ளது. தளபதி விஜய் சார் உடன் நடிக்க உள்ளதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” எனவும் கூறியிருப்பதாகப் படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் இயக்குநர் மிஷ்கின், “21 வருடங்களுக்கு முன் விஜய் நடித்த படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தேன். இத்தனை வருடங்களில் ஒரு விஷயம் மாறாமல் உள்ளது. அது விஜய்க்கும் எனக்கும் உள்ள பிணைப்பு.

இந்த பிணைப்புடன் லோகேஷ் கனகராஜூக்கு என் மீதும் எனக்கு அவர் மீதும் உள்ள பரஸ்பர அன்பும் மரியாதையும் என்னை ஆர்வம் கொள்ளச் செய்கிறது. தளபதி 67 படத்தினை உங்களோடு தியேட்டரில் காண ஆர்வமாக உள்ளேன்" என அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்.

image

நடிகர் மன்சூர் அலிகான், “யாணும் இணைந்தேன். தளபதி 67இல் லோகேஷ் நீ ஆர்ப்பரித்து எழு; திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே” என அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளார். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், “இந்த நேரத்தில் கேமரா முன் மற்றும் திரைத்துறையில் கைதேர்ந்தவர்களுடன் தோள்சேர்ந்து நிற்கிறேன்.

தளபதி 67ல் தானும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி” எனவும், இயக்குநரும் நடிகருமான அர்ஜுன், ”ஒரு அற்புதமான கேப்டனால் (லோகேஷ் கனகராஜ்) வழிநடத்தப்படும் கப்பலில் ஏறுகிறேன்” எனவும் அந்த போஸ்டர்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அப்டேட் மழையை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம், “இத்துடன் இன்றைய தளபதி 67 அப்டேட்ஸ் முடிவடைகிறது! நாளை சந்திப்போம்” எனக்குறிப்பிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை நடிகை த்ரிஷா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் படத்திலிருப்பது பற்றிய அப்டேட்ஸ் வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த தொடர் அறிவுப்புகளால் ரசிகர்கள் விஜய் உற்சாகத்தில் உள்ளனர்.

ஒரு ரசிகை, “இன்னைக்கு அறிவிச்சவங்களாம், படத்தில் ஒரு தரப்பு போல” என்றுள்ளார். இன்னொருவர், “நாங்க வெயிட் பண்ணுவோம்னு தெரிஞ்சு, இன்னைக்கு அப்டேட் முடிஞ்சிருச்சுனு சொல்றீங்க பாத்தீங்களா... அண்ணா, நீங்க எங்க ஆளு அண்ணா” என்றுள்ளார். இன்னொருவரோ “என்னா மனுஷன்யா” என போட்டுள்ளார்.

தொடர்ந்து பலரும் த்ரிஷா பற்றிய அறிவிப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/PKAGkR6
via IFTTT

Comments

Popular posts from this blog

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை... ஏன்? நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM