"நீ ஒரு சூப்பர் ஸ்டாருன்னு ப்ரூப் பண்ணிட்ட” - ரஜினியின் மங்காத மகுடமும் விஜய்யின் ஆசையும்! சூப்பர் ஸ்டார் பட்டமும் தொடரும் விவாதமும் சமீப காலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான விவாதம் அனல் பறந்து கொண்டே இருக்கிறது. வசூல் சக்கரவர்த்தியாக வலம்வரும் நடிகர் விஜய்தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என்று பலரும் கூறி வருகிறார்கள். வைரலாகும் தீ வீடியோ! ரஜினிகாந்த் நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தீ. ரஜினியின் சினிமா கேரியரில் பில்லா போன்று மிகவும் ஸ்டைலிஸ் ஆன கேங்ஸ்டர் படம்தான் தீ. தன்னுடைய யதார்த்தமான, ஸ்டைலான நடிப்பில் எல்லோரையும் கட்டிப்போட்டிருப்பார் ரஜினி. தீ திரைப்படம் வெளியாகி 41 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை அவருடைய ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக தீப் படத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜி பேசும் வசனத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். தீ படத்தில் ரஜினி டான் ஆக வளர்ந்து வரும் பொழுது ஒரு முக்கியமான சம்பத்திற்கு பிறகு, “நீ ஒரு சூப்பர்ஸ்டாருன்னு ஃப்ரூப் பண்ணிட்ட, இன்று முதல் இந்த நாற்காலி உனக்குத்தான் சொந்தம்" என்று பேசியிருப்பார். அந்த வீடியோவை ஷேர் செய்த பலரும், ”தீ படத்தில் இந்த வசனம். இது படத்துக்கான வசனம் என்று மட்டும் கருதினால் அது உங்கள் தவறு” என்று குறிப்பிட்டு சிலாகித்து வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஏற்க மறுத்த ரஜினி! ஆபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றிய ரஜினிகாந்திற்கு, 1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது. ஆனால், முதலில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினிகாந்த் விரும்பவில்லை. அதனை ஏற்க மறுத்தார். இதுதொடர்பாக தயாரிப்பாளர் தாணு அளித்த பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருந்தார். ஏனெனில் பைரவி படத்தின் சென்னை வட்டார விநியோகஸ்தராக இருந்தவர் தாணு. அன்று தாணு போஸ்டர்கள் மூலம் செய்த தரமான புரமோஷன்களை கண்டு ரஜினியே மிரண்டு போய்விடார். தாணுவையும் பாராட்டி இருக்கிறார். ஆனால், சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அவர் விரும்பவில்லை. இதுதொடர்பாக தாணு அளித்த அந்த பேட்டியில், “பைரவி பட தயாரிப்பாளர் கலைஞானம், டைரக்டர் எம்.பாஸ்கர் இருவரும் என்னை ஒரு நாள் வந்து பார்த்தார்கள். "ரஜினி அனுப்பி, உங்களை வந்து பார்க்கிறோம். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகிய மூத்த கலைஞர்கள் இருக்கும்போது, தன்னை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதை ரஜினி விரும்பவில்லை. அப்படி விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிடச் சொன்னார்'' என்றார்கள். ஆனால், இதற்குள் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பிரபலமாகி விட்டது. ரஜினியை பார்க்கும்போதெல்லாம் ரசிகர்கள் `சூப்பர் ஸ்டார்' என்று குரல் எழுப்ப ஆரம்பித்து விட்டனர். எனவே, நான் துணிந்து `கிரேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் பைரவி என்று விளம்பரம் செய்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார். விஜய் மனதிற்கு சூப்பர் ஸ்டார் ஆசை இருக்கா? வாரிசு படம் தொடர்பான புரமோஷன் நிகழ்வுகளின் போதுதான் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான விவாதம் சூடுபிடித்தது. இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் சூர்ய வம்சம் நிகழ்வை சுட்டிக்காட்டி விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று கூறினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இருப்பினும், ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று பதில் கொடுத்து வருகிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், தன்னை வைத்துகொண்டே பலரும் சூப்பர் ஸ்டார் என்று கூறி வரும் நிலையில் நடிகர் விஜய் ஏன் இதுவரை அதுகுறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை விஜய்யும் அதனை ரசிக்கிறாரா என்றே தோன்றுகிறது. வசூலை பொறுத்தவரை தமிழ் சினிமா நெம்பர் 1 இடத்தில் இருப்பதால் அவர் நினைப்பதில் தவறில்லை. இதனை செய்திருந்தால் விஜய் மதிப்பு கூடுமல்லவா! சீனியர் நடிகரான ரஜினிகாந்திற்கு இன்றளவும் மசுவு குறையவே இல்லை. அமிதாப் போன்று டிராக் மாற்றிக் கொள்ளவும் இல்லை. ரஜினியின் படங்களுக்கும் இன்றளவும் முதல் நாள் முதல் காட்சிக்கு கூட்டம் அலைமோதவே செய்கிறது. விஸ்வாசம் பெரிய வெற்றி பெற்ற போதும் பேட்ட அதற்கு ஈடு கொடுத்தது. அப்படி களத்தில் அவர் இருக்கையில் விஜய் சற்றே காலம் பொறுத்து இருக்கலாம். ஒரு விஜய் தானாக முன் வந்து ‘ரஜினி களத்தில் இருக்கையில் என்னை யாரும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்’ என்று பேசினால் அவர் மீதான மதிப்பு பல மடங்கும் கூடும் அல்லவா. இதனை ஏன் விஜய் செய்ய தவறுகிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சூப்பர் ஸ்டார் பட்டமும் தொடரும் விவாதமும்

சமீப காலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான விவாதம் அனல் பறந்து கொண்டே இருக்கிறது. வசூல் சக்கரவர்த்தியாக வலம்வரும் நடிகர் விஜய்தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

வைரலாகும் தீ வீடியோ!

ரஜினிகாந்த் நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தீ. ரஜினியின் சினிமா கேரியரில் பில்லா போன்று மிகவும் ஸ்டைலிஸ் ஆன கேங்ஸ்டர் படம்தான் தீ. தன்னுடைய யதார்த்தமான, ஸ்டைலான நடிப்பில் எல்லோரையும் கட்டிப்போட்டிருப்பார் ரஜினி. தீ திரைப்படம் வெளியாகி 41 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை அவருடைய ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகிறார்கள்.

குறிப்பாக தீப் படத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜி பேசும் வசனத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். தீ படத்தில் ரஜினி டான் ஆக வளர்ந்து வரும் பொழுது ஒரு முக்கியமான சம்பத்திற்கு பிறகு, “நீ ஒரு சூப்பர்ஸ்டாருன்னு ஃப்ரூப் பண்ணிட்ட, இன்று முதல் இந்த நாற்காலி உனக்குத்தான் சொந்தம்" என்று பேசியிருப்பார். அந்த வீடியோவை ஷேர் செய்த பலரும், ”தீ படத்தில் இந்த வசனம். இது படத்துக்கான வசனம் என்று மட்டும் கருதினால் அது உங்கள் தவறு” என்று குறிப்பிட்டு சிலாகித்து வருகிறார்கள்.

image

சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஏற்க மறுத்த ரஜினி!

ஆபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றிய ரஜினிகாந்திற்கு, 1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது. ஆனால், முதலில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினிகாந்த் விரும்பவில்லை. அதனை ஏற்க மறுத்தார். இதுதொடர்பாக தயாரிப்பாளர் தாணு அளித்த பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருந்தார். ஏனெனில் பைரவி படத்தின் சென்னை வட்டார விநியோகஸ்தராக இருந்தவர் தாணு. அன்று தாணு போஸ்டர்கள் மூலம் செய்த தரமான புரமோஷன்களை கண்டு ரஜினியே மிரண்டு போய்விடார். தாணுவையும் பாராட்டி இருக்கிறார். ஆனால், சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அவர் விரும்பவில்லை.

இதுதொடர்பாக தாணு அளித்த அந்த பேட்டியில், “பைரவி பட தயாரிப்பாளர் கலைஞானம், டைரக்டர் எம்.பாஸ்கர் இருவரும் என்னை ஒரு நாள் வந்து பார்த்தார்கள். "ரஜினி அனுப்பி, உங்களை வந்து பார்க்கிறோம். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகிய மூத்த கலைஞர்கள் இருக்கும்போது, தன்னை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதை ரஜினி விரும்பவில்லை. அப்படி விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிடச் சொன்னார்'' என்றார்கள். ஆனால், இதற்குள் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பிரபலமாகி விட்டது. ரஜினியை பார்க்கும்போதெல்லாம் ரசிகர்கள் `சூப்பர் ஸ்டார்' என்று குரல் எழுப்ப ஆரம்பித்து விட்டனர். எனவே, நான் துணிந்து `கிரேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் பைரவி என்று விளம்பரம் செய்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

image

விஜய் மனதிற்கு சூப்பர் ஸ்டார் ஆசை இருக்கா?

வாரிசு படம் தொடர்பான புரமோஷன் நிகழ்வுகளின் போதுதான் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான விவாதம் சூடுபிடித்தது. இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் சூர்ய வம்சம் நிகழ்வை சுட்டிக்காட்டி விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று கூறினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இருப்பினும், ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று பதில் கொடுத்து வருகிறார்கள்.

ஆனால், இந்த விவகாரத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், தன்னை வைத்துகொண்டே பலரும் சூப்பர் ஸ்டார் என்று கூறி வரும் நிலையில் நடிகர் விஜய் ஏன் இதுவரை அதுகுறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை விஜய்யும் அதனை ரசிக்கிறாரா என்றே தோன்றுகிறது. வசூலை பொறுத்தவரை தமிழ் சினிமா நெம்பர் 1 இடத்தில் இருப்பதால் அவர் நினைப்பதில் தவறில்லை.

image

இதனை செய்திருந்தால் விஜய் மதிப்பு கூடுமல்லவா!

சீனியர் நடிகரான ரஜினிகாந்திற்கு இன்றளவும் மசுவு குறையவே இல்லை. அமிதாப் போன்று டிராக் மாற்றிக் கொள்ளவும் இல்லை. ரஜினியின் படங்களுக்கும் இன்றளவும் முதல் நாள் முதல் காட்சிக்கு கூட்டம் அலைமோதவே செய்கிறது. விஸ்வாசம் பெரிய வெற்றி பெற்ற போதும் பேட்ட அதற்கு ஈடு கொடுத்தது. அப்படி களத்தில் அவர் இருக்கையில் விஜய் சற்றே காலம் பொறுத்து இருக்கலாம்.

ஒரு விஜய் தானாக முன் வந்து ‘ரஜினி களத்தில் இருக்கையில் என்னை யாரும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்’ என்று பேசினால் அவர் மீதான மதிப்பு பல மடங்கும் கூடும் அல்லவா. இதனை ஏன் விஜய் செய்ய தவறுகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/vgYQMa9
via IFTTT

Comments

Popular posts from this blog

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை... ஏன்? நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM