”பேத்திக்காக பாட்டி நடத்தும் போராட்டம்” - ரசிகர்களை கவர்ந்ததா ‘செம்பி’? - திரைப்பார்வை பேத்திக்காக ஒரு பாட்டி நடத்தும் போராட்டம் தான் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும்`செம்பி’ படத்தின் ஒன்லைன். கொடைக்கானல், புலியூரில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் வீரத்தாயி (கோவை சரளா). அவரது பத்து வயது பேத்தி செம்பி (நிலா). மலையில் கிடைக்கும் தேன், கிழங்கு போன்றவற்றை எடுத்து சந்தையில் விற்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். தன்னுடைய மகள், மருமகனை இழந்தப்பின் பேத்திக்கு இருக்கும் ஒரே ஆதரவு தான் மட்டுமே, அவளை எப்படியாவது படிக்க வைத்து மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற கனவில் இருக்கிறார் பாட்டி வீரத்தாயி. ஆனால் அந்தக் கனவை சிதைப்பது போல, ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. மூன்று பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறாள் சிறுமி செம்பி. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் எனக் கண்டுபிடித்து, அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார் வீரத்தாயி. ஆனால், ஒரு கொலை கேஸில் குற்றவாளியாக வீரத்தாயியையே போலீஸ் தேடுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா, வீரத்தாயியை போலீஸ் தேடுவது ஏன்? இந்தக் கதையில் அஷ்வின் குமாரின் பங்கு என்ன? என்பதை எல்லாம் சொல்கிறது `செம்பி’. படத்தின் நிறைகள் எனப் பார்த்தால் பிரபு சாலமன் வழக்கம் போல மிக எளிமையான கதையை எடுத்துக் கொண்டு அதை அழுத்தமாக சொல்ல முயன்றிருக்கிறார். குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல், பழங்குடி இன மக்கள் நடத்தப்படும் விதம், பெண்கள் மேல் ஒழுக்கம் என்ற பெயரில் சுமத்தப்படும் பிற்போக்குத்தனங்கள் எனப் பலவற்றை கேள்வி கேட்பது படத்தின் ஹைலைட் என சொல்லலாம். நடிகர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் கோவை சரளா, அஷ்வின் குமார், தம்பி ராமையா என அனைவரும் சரியான பங்களிப்பை செய்திருக்கிறார்கள். சில இடங்களில் கோவை சரளா நடிப்பு பொருந்தவில்லை என்றாலும், எமோஷனலான காட்சிகளில் மிக அருமையாக நடித்திருக்கிறார். செம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலா நல்ல அறிமுகம். இவர்களுடன் சேர்த்து இன்னொரு கதாபாத்திரமும் பார்வையாளர்களை கவர்கிறது. பேருந்தில் இருக்கும் அனைவரையும் வாடா, போடவென அழைத்து அந்தக் கதாபாத்திரம் செய்யும் காமெடி படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. மலை சார்ந்தப் பகுதிகளை அதன் ஈரத்தோடு பதிவு செய்திருப்பது, ஒரே பேருந்துக்குள் சுவாரஸ்யமான கோணங்கள் பிடித்தது, சேசிங் காட்சிகளில் த்ரில் கொடுப்பது என ஒளிப்பதிவாளர் ஜீவன் அபாரமாக உழைத்திருக்கிறார். நிவேஸ் கே பிரசன்னா இசையில் ‘ஆத்தி என் மேல’ பாடல் மிக சிறப்பாக இருந்தது. சில எமோஷனல் காட்சிகளில் பின்னணி இசையால் வலு சேர்த்திருக்கிறார். இதைத் தாண்டி ஒரு ப்ளஸ், சமீபகாலமாக பல, பாலியல் குற்றங்களைப் பற்றிய படங்களில் சொல்லப்படும் அதே கருத்தை செம்பியும் வலியுறுத்தி இருப்பது. பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனையை எமோஷனலாக கையாளாமல், அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறது படம். ‘செம்பி’ படத்தின் குறைகள் எனப் பார்த்தால், உணர்வு ரீதியாக முடிந்த வரை அழுத்தமாக கதையை பிரபு சாலமன் சொல்லியிருந்தாலும், லாஜிக்காக யோசித்தால் பல சிக்கல்கள் வருகிறது. ஒரு குறிப்பிட்ட காட்சியில், ஒரு பஸ்ஸுக்குள் மினி சைபர் க்ரைம் டீமே இருப்பது போன்று, விறுவிறுப்பாக நடக்கும் விஷயங்கள் எதுவும் நம்பும்படியாக இல்லை. அது கதையை தன் வசதிக்கு ஏற்ப இயக்குநர் எழுதிக் கொள்ள மட்டுமே உதவியிருக்கிறதே தவிர, கதையின் போக்கில் நிகழ்ந்த மாதிரி இல்லை. சில எமோஷனலான காட்சிகள் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகி, அதிகப்படியாக காட்சிகள் நீட்டபட்ட உணர்வும் எழுகிறது. வில்லன்களாக காட்டப்பட்டிருக்கும் அந்த மூவரின் நடிப்பும் மிக செயற்கையாக துருத்திக் கொண்டு தெரிந்தது. இதையும் மீறி, அஷ்வின் குமார் நடித்திருக்கும் கதாபாத்திரம் சட்டத்தை பிரதிபலிப்பதாக வருகிறதா? அல்லது கடவுளைப் பிரதிபலிப்பதாக வருகிறதா என்ற குழப்பம் ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. இது போன்று நிறைகளும், குறைகளும் சேர்ந்தே தான் உருவாகியிருக்கிறது படம். இவற்றை சரி செய்திருந்தால், இந்த வருடத்தில் பாலியல் குற்றங்கள் பற்றிப் பேசிய, ‘கார்கி’, ‘அனல் மேலே பனித்துளி’ போன்ற படங்கள் போல குறிப்பிட்டு சொல்லும்படியான சினிமாவாக மாறியிருக்கும் இந்த ‘செம்பி’. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பேத்திக்காக ஒரு பாட்டி நடத்தும் போராட்டம் தான் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும்`செம்பி’ படத்தின் ஒன்லைன்.

கொடைக்கானல், புலியூரில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் வீரத்தாயி (கோவை சரளா). அவரது பத்து வயது பேத்தி செம்பி (நிலா). மலையில் கிடைக்கும் தேன், கிழங்கு போன்றவற்றை எடுத்து சந்தையில் விற்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். தன்னுடைய மகள், மருமகனை இழந்தப்பின் பேத்திக்கு இருக்கும் ஒரே ஆதரவு தான் மட்டுமே, அவளை எப்படியாவது படிக்க வைத்து மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற கனவில் இருக்கிறார் பாட்டி வீரத்தாயி. ஆனால் அந்தக் கனவை சிதைப்பது போல, ஒரு அசம்பாவிதம் நடக்கிறது.

மூன்று பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறாள் சிறுமி செம்பி. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் எனக் கண்டுபிடித்து, அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார் வீரத்தாயி. ஆனால், ஒரு கொலை கேஸில் குற்றவாளியாக வீரத்தாயியையே போலீஸ் தேடுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா, வீரத்தாயியை போலீஸ் தேடுவது ஏன்? இந்தக் கதையில் அஷ்வின் குமாரின் பங்கு என்ன? என்பதை எல்லாம் சொல்கிறது `செம்பி’.

படத்தின் நிறைகள் எனப் பார்த்தால் பிரபு சாலமன் வழக்கம் போல மிக எளிமையான கதையை எடுத்துக் கொண்டு அதை அழுத்தமாக சொல்ல முயன்றிருக்கிறார். குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல், பழங்குடி இன மக்கள் நடத்தப்படும் விதம், பெண்கள் மேல் ஒழுக்கம் என்ற பெயரில் சுமத்தப்படும் பிற்போக்குத்தனங்கள் எனப் பலவற்றை கேள்வி கேட்பது படத்தின் ஹைலைட் என சொல்லலாம்.

image

நடிகர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் கோவை சரளா, அஷ்வின் குமார், தம்பி ராமையா என அனைவரும் சரியான பங்களிப்பை செய்திருக்கிறார்கள். சில இடங்களில் கோவை சரளா நடிப்பு பொருந்தவில்லை என்றாலும், எமோஷனலான காட்சிகளில் மிக அருமையாக நடித்திருக்கிறார். செம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலா நல்ல அறிமுகம். இவர்களுடன் சேர்த்து இன்னொரு கதாபாத்திரமும் பார்வையாளர்களை கவர்கிறது. பேருந்தில் இருக்கும் அனைவரையும் வாடா, போடவென அழைத்து அந்தக் கதாபாத்திரம் செய்யும் காமெடி படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

மலை சார்ந்தப் பகுதிகளை அதன் ஈரத்தோடு பதிவு செய்திருப்பது, ஒரே பேருந்துக்குள் சுவாரஸ்யமான கோணங்கள் பிடித்தது, சேசிங் காட்சிகளில் த்ரில் கொடுப்பது என ஒளிப்பதிவாளர் ஜீவன் அபாரமாக உழைத்திருக்கிறார். நிவேஸ் கே பிரசன்னா இசையில் ‘ஆத்தி என் மேல’ பாடல் மிக சிறப்பாக இருந்தது. சில எமோஷனல் காட்சிகளில் பின்னணி இசையால் வலு சேர்த்திருக்கிறார். இதைத் தாண்டி ஒரு ப்ளஸ், சமீபகாலமாக பல, பாலியல் குற்றங்களைப் பற்றிய படங்களில் சொல்லப்படும் அதே கருத்தை செம்பியும் வலியுறுத்தி இருப்பது. பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனையை எமோஷனலாக கையாளாமல், அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறது படம்.

image

‘செம்பி’ படத்தின் குறைகள் எனப் பார்த்தால், உணர்வு ரீதியாக முடிந்த வரை அழுத்தமாக கதையை பிரபு சாலமன் சொல்லியிருந்தாலும், லாஜிக்காக யோசித்தால் பல சிக்கல்கள் வருகிறது. ஒரு குறிப்பிட்ட காட்சியில், ஒரு பஸ்ஸுக்குள் மினி சைபர் க்ரைம் டீமே இருப்பது போன்று, விறுவிறுப்பாக நடக்கும் விஷயங்கள் எதுவும் நம்பும்படியாக இல்லை. அது கதையை தன் வசதிக்கு ஏற்ப இயக்குநர் எழுதிக் கொள்ள மட்டுமே உதவியிருக்கிறதே தவிர, கதையின் போக்கில் நிகழ்ந்த மாதிரி இல்லை.

சில எமோஷனலான காட்சிகள் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகி, அதிகப்படியாக காட்சிகள் நீட்டபட்ட உணர்வும் எழுகிறது. வில்லன்களாக காட்டப்பட்டிருக்கும் அந்த மூவரின் நடிப்பும் மிக செயற்கையாக துருத்திக் கொண்டு தெரிந்தது. இதையும் மீறி, அஷ்வின் குமார் நடித்திருக்கும் கதாபாத்திரம் சட்டத்தை பிரதிபலிப்பதாக வருகிறதா? அல்லது கடவுளைப் பிரதிபலிப்பதாக வருகிறதா என்ற குழப்பம் ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. இது போன்று நிறைகளும், குறைகளும் சேர்ந்தே தான் உருவாகியிருக்கிறது படம்.

இவற்றை சரி செய்திருந்தால், இந்த வருடத்தில் பாலியல் குற்றங்கள் பற்றிப் பேசிய, ‘கார்கி’, ‘அனல் மேலே பனித்துளி’ போன்ற படங்கள் போல குறிப்பிட்டு சொல்லும்படியான சினிமாவாக மாறியிருக்கும் இந்த ‘செம்பி’.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/IoZTrHt
via IFTTT

Comments

Popular posts from this blog

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை... ஏன்? நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM