”கோவம் வந்தா கைநீட்டுவாரா?”.. சுயமரியாதைக்காரி ’அம்மு’வுக்கு.. ஒரு ராயல் சல்யூட்! சுயமரியாதைக்காரி அம்மு. முன்கதை பின்கதை இல்லாமல் நேரடியாகவே சொல்கிறோம். அம்மு பேசுவது, குடும்ப வன்முறையை. கணவனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஒரு பெண், என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அம்முவின் குரல். படத்தில் ஒவ்வொரு காட்சியுமே முக்கியமான காட்சிகள்தான் என்றபோதிலும் இரண்டாம்பாதியை விடவும், முதல்பாதிதான் நமக்கு மிகப்பெரிய வலியை கொடுக்கிறது. அம்மு, தான் குடும்ப வன்முறைக்கு உட்படுவதை, கொஞ்சம் கொஞ்சமாக உணரத்தொடங்கும் அந்தக் காட்சிகள், பார்ப்போரையும்கூட பதைபதைக்க வைக்கிறது. அம்முவில் பாராட்டவும் பதைபதைக்கவும் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், படத்தில் பேசப்படும் முக்கியமான வசனங்களை இங்கு பட்டியலிட விரும்புகிறோம். அதனூடே, படத்தின் விமர்சனமும் இங்கு அமையும். ஆகவே, ஸ்பாய்லர்கள் உண்டு. திருமணமாகிய முதல் சில வாரங்கள் மிக மகிழ்ச்சியாகவே போகிறது அம்முவின் வாழ்க்கை. அத்தனை மாதங்கள் கணவரிடமிருந்து முத்தத்தை மட்டுமே பெற்ற அம்முவின் கன்னத்தில், ஒரு நாளில் முதன்முதலில் அறையொன்று கிடைக்கிறது. எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் தவிக்கும் அம்மு, தன் தாயிடம் அதை சொல்கிறார். இதைக்கேட்டவுடன், தன் மகளிடம் `நீ என்ன செஞ்ச? என கேட்கிறார் அந்த தாய். அம்மு வேகமாக, `நான் தான் தப்பு செஞ்சிருப்பேன்னு எப்படிம்மா நீ முடிவு பண்ணுன? அப்போ நான் தப்பு பண்ணிருந்தா, அவர் என்னை அடிக்கலாமா’ என்று கேட்கிறாள் அம்மு. பின் அந்த அம்மாவே அம்முவின் நிலை புரிந்து அவளிடம் ஒரு விஷயத்தை சொல்கிறார். படத்தின் மிக முக்கியமான வசனமும் கருத்தும் இதுதான். அம்முவின் அம்மா சொல்கிறார்: “உன்னோட அப்பா என்னை ஒருமுறை அடிச்சிருக்கிறார். அப்போ என்னோட அம்மா எங்கிட்ட `புருஷங்கிறவன் அடிக்கத்தான் செய்வான். இதுவொன்னும் புதுசா உனக்கு மட்டும் நடக்கல. உன் புருஷன் உன்னை மறுபடியும் அடிக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கு. இதை எந்தக் காலத்துலயும் நிறுத்தவும் முடியாது. ஆம்பளைங்களுக்கு கோவம் வரத்தான் செய்யும். ஏன்னா, அவன் வேலைக்கு போவான்; 1,008 டென்ஷன் இருக்கும். அப்போ அந்த டென்ஷனை யார்மேல காட்ட முடியும்? நம்ம மேல தான் கோவப்படுவாங்க. மொத்த காதலும் உனக்குதான் வேணும்னு நினைக்கிறள்ல… அப்போ மொத்த வலியையும் நீதான் ஏத்துக்கணும். ஒரு குழந்தை பிறந்தா, எல்லா பிரச்னையும் சரியாகிடும்’னு சொன்னாங்க. ஆனா எங்க அம்மா எனக்கு இதையெல்லாம் சொல்லிருக்கக்கூடாது. இதுக்கு பதிலா என்னோட அம்மா எங்கிட்ட `ஆண் என்பவன், தன்னோட மனைவிமேல கைநீட்டக்கூடாது. ஒருவேளை அவன் அடிச்சான்னா, அவன்கூட வாழ வேண்டிய கட்டாயம் அந்தப் பொண்ணுக்கு கிடையாது’னு சொல்லிருக்கணும். நான் உங்கிட்ட இதையே சொல்றேன். அம்மு, உனக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்” என்கிறார். இந்தியாவில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண் ஒவ்வொருவருக்கும், அவர்களின் தாய்மார்கள் சொல்லவேண்டிய மிக அழுத்தமான விஷயம் இது. அதை அம்மு அவ்வளவு நேர்த்தியாகவும் நியாமாகவும் அறத்தோடும் பேசியிருக்கிறது. இதற்காகவே `அம்மு’வை எழுதி இயக்கிய சாருகேஷ் சேகருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். படத்தில் இப்படி இன்னும் நிறைய அழுத்தமான வசனங்கள் உள்ளன. குறிப்பாக, தான் பாதிக்கப்படுகிறோம் என்பதை அம்மு உணர்கையில், அவள் சொல்வது `எனக்கே என் மேல மரியாதை இல்லாம போச்சு. அவர் என்ன பண்ணாலும், பொறுத்துக்கிட்டு ஒரு ஓரமா இருக்கேன்’ என சொல்வது நமக்குள்ளும் வலியை கடத்துகிறது. படத்தின் இண்டெர்வெல் ப்ளாக்கில், அம்முவுக்கு தான் மட்டுமே தன்னுடைய பிரச்னைகளுக்கு தீர்வு என்பது புரிகிறது. அப்போது அவர் சொல்வது - `இனிமே நான் சும்மாருக்க மாட்டேன். எவனாவது வந்து என்னை காப்பாத்துவான்னு உட்கார்ந்துகிட்டு இருக்க முடியாது. எதாவது நடக்கனும்னா, நான் தான் எதாவது பண்ணனும்’ என்கிறார். அதற்குப்பின் அம்மு தொடுவதெல்லாம் அதிரடிதான். அதிரடி என்றவுடன், இவரும் அடிப்பரென நினைத்துவிடாதீர்கள். தெலுங்கு படமென்றாலும்கூட, இப்படத்தில் அப்படி நம்ப முடியாத காட்சிகளே கிடையாது. அம்மு, அந்தப் புரிதலுக்குப் தன் கணவனுக்கு பாடம் புகட்டுகிறாள். `இனி என் மேல் மட்டுமில்ல, வேற யார் மேலயும் கை நீட்டக்கூடாது’ என அறச்சீற்றம் கொள்கிறாள். அங்கிருந்து தன்னை தானே மீட்க தொடங்குகிறார் அவர். இடையே நிறைய ட்விஸ்ட்களும் படத்தில் உள்ளது. பாபி சிம்ஹா வருகிறார்... போலீஸ் நிலைய காட்சிகள் வருகின்றன... முகமூடி போட்ட கணவரின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக கழன்று விழுகிறது என்றிருக்க, அந்த நிலையில்தான் அம்மு கருவுறுகிறாள். அந்த தருணத்தில், பெண் உடல் மீது நிகழும் அரசியலையும் அம்மு பேசுகிறாள். அந்தக் குழந்தையை பெற்றெடுப்பதா, வேண்டாமா என்பதற்கு அம்மு எடுக்கும் முடிவுக்கு, இன்னொரு அப்ளாஸ். பொதுவாக குடும்ப வன்முறையென்பது, ஒரு நொடியில் தொடங்குவதில்லை. அதற்கு சில படிநிலைகள் இருக்கிறது. அதை அம்மு படக்குழு, மிக சென்சிட்டிவாக கையாண்டிருப்பது, மிகச்சிறப்பான விஷயம். குறிப்பாக அம்மு தன்னை தானே குற்றப்படுத்திக்கொள்ளும் சில காட்சிகள் அத்தனை எதார்த்தமாக இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்துக்கொண்டு, பிச்சைக்காரர் ஒருவரிடம் `அடி வாங்குற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்னே எனக்கு தெரில. எனக்கு தெரிஞ்சதெலாம், வெக்கமே இல்லாம அடிவாங்கிட்டு உட்கார்ந்து அழுவுறது. ச்ச… தப்பே பண்ணலைன்னாகூட, என்னை நானே திட்டிகிட்டே இருக்கேன். நான் ஏன் இப்படி இருக்கேன்? முதல்ல அவருக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது? கோவம் வந்தா கைநீட்டுவாரா? ஆனா அவர் கெட்டவர்னு கிடையாது… அரக்கன்னும் கிடையாது. என்னை ரொம்ப நல்லா பாத்துக்குவாரு. என்மேல அவருக்கு காதல் இல்லனுலாம் சொல்லமுடியாது.  அப்பப்போ அவரை சுற்றி நடக்குற விஷயங்களால அவர் டென்ஷனாகி அப்படி பண்றாரு. அதனால இது முழுசா அவரோட தப்புன்னு சொல்லிட முடியாது. ஆனா என் மனசு இதை ஒத்துக்க மாட்டேங்குது. தினமும் இப்படியெல்லாம் நடக்காது. நிறைய நாள் நாங்க நல்லாதான் இருப்போம். யோசிச்சு பார்த்தா, மேக்சிமம் நாங்க நல்லாதான் இருப்போம். எப்பயாவது பிரச்னை வருதுன்னு நாம விட்டுட்டு போயிட்டா தப்புதானே? இதலாம் சகிச்சுகிட்டு நான் அவர்கிட்ட அன்பா இருந்தா, அவர் ஏதோ ஒரு நாள் திருந்துவாருல்ல… அவர் என்னை வலியே கொடுக்க முடியாத அளவுக்கு காதலிக்கணும். அந்தளவுக்கு அவர் என்னை லவ் பண்ணா போதும். அவர்தான் என்னோட உலகம்’ என்கிறார் அம்மு. இத்தனை குற்ற உணர்ச்சிக்குப் பின்னர்தான் அம்மு சீறிப்பாய்கிறாள். அதுவும் க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட ட்விஸ்ட், மனசை விட்டு நீங்காதபடி இருக்கிறது. அம்முவாக ஐஷ்வர்ய லட்சுமி. ஒவ்வொரு உணர்ச்சியையும் அவ்வளவு நேர்த்தியாக கையாள்கிறார். திருமணத்துக்குப் பின் அள்ள அள்ள குறையாத அளவுக்கு கணவனுக்கு காதலை வழங்குவது – படுக்கையறையில் கொச்சைப்படுத்தும் வார்த்தைகளை சகிப்பது - முதல்முறை கணவனை கோபத்தை காணும்போது செய்வதறியாமல் திகைப்பது – நடுவழியில் கணவனால் தனித்துவிடப்படும்போது கையில் காசின்றி ஆளில்லா சாலையில் நிற்பது – மூஞ்சுக்கு நேரே வரும் விசிறியெறியப்பட்ட தட்டை கண்டு ஒளிவது என சின்ன சின்னதாக தொடங்கி, படுக்கையறையில் பெல்ட்டில் அடிவாங்குவது வரை நம்மை உரையவைக்கிறார். க்ளைமாஸில் `உன்னை பார்த்து எனக்கு பயம் இல்ல’ என தன்னை அப்யூஸ் செய்தவனிடம் தைரியமாக பேசுவது என திரையிலும் நம் மனதிலும் நிறைந்திருக்கிறார். சொல்லப்போனால், நிமிர வைக்கிறார். அம்மு மட்டுமன்றி, படத்தில் இருக்கும் அத்தனை கதாபாத்திர வடிவமைப்புமே இந்த சென்சிடிவ்வான விஷயத்தை, நேர்த்தியாக கையாள்கிறது. கணவராக நடித்திருக்கும் நவீன் சந்திராவும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். இவர்களுடன் பாபி சிம்ஹா, சத்யா கிருஷ்ணன், அஞ்சலி அமீர், ரகு பாபு உள்ளிட்டோரும் நம் கவனத்தை ஈர்க்கின்றனர். என்னடா இது, படத்தை அப்படியே இங்கேயே சொல்லிட்டீங்களே என நினைக்க வேண்டாம். இதையும் விட அழுத்தமாக, இரண்டாம் பாதியில் ஏராளமான விஷயங்களை செய்கிறாள் அம்மு. அம்மு பேசும் அரசியல் மிக முக்கியமானது. `அம்மு’ படத்தை, நல்ல படம் என சொல்வதை விட, உங்களை சற்று நிலைகுலைய வைக்கும் படமென்று சொல்லலாம். அம்மு, மனதை விட்டு நீங்காமல் நம்மை தொந்தரவு செய்வாள். அம்மு செய்யும் அந்த தொந்தரவு, ஒவ்வொருவரும் பெற வேண்டியது. ஏனெனில் இந்தியாவில் இன்னும் இன்றும் நிறைய அம்முக்கள் இருக்கிறார்கள். அவர்களும், அவர்களை சார்ந்த நாமும் மிஸ் பண்ணாம நிச்சயமா பார்க்க வேண்டிய படம் அம்மு. படம், தமிழில் அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது. இதை வாசிக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும் அம்முவோடு சேர்ந்து நாங்களும் சொல்கிறோம். `சரியோ தப்போ. உங்களோட எந்தவொரு முடிவையும், வேற யாரையும் எடுக்க விடாதீங்க. இது உங்க லைஃப். உங்க உடல். நீங்கதான் உங்களுக்கான முடிவுகளை எடுக்கணும்’. டாட். - ஜெ.நிவேதா Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சுயமரியாதைக்காரி அம்மு.

முன்கதை பின்கதை இல்லாமல் நேரடியாகவே சொல்கிறோம். அம்மு பேசுவது, குடும்ப வன்முறையை. கணவனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஒரு பெண், என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அம்முவின் குரல்.

படத்தில் ஒவ்வொரு காட்சியுமே முக்கியமான காட்சிகள்தான் என்றபோதிலும் இரண்டாம்பாதியை விடவும், முதல்பாதிதான் நமக்கு மிகப்பெரிய வலியை கொடுக்கிறது. அம்மு, தான் குடும்ப வன்முறைக்கு உட்படுவதை, கொஞ்சம் கொஞ்சமாக உணரத்தொடங்கும் அந்தக் காட்சிகள், பார்ப்போரையும்கூட பதைபதைக்க வைக்கிறது. அம்முவில் பாராட்டவும் பதைபதைக்கவும் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், படத்தில் பேசப்படும் முக்கியமான வசனங்களை இங்கு பட்டியலிட விரும்புகிறோம். அதனூடே, படத்தின் விமர்சனமும் இங்கு அமையும். ஆகவே, ஸ்பாய்லர்கள் உண்டு.

image

திருமணமாகிய முதல் சில வாரங்கள் மிக மகிழ்ச்சியாகவே போகிறது அம்முவின் வாழ்க்கை. அத்தனை மாதங்கள் கணவரிடமிருந்து முத்தத்தை மட்டுமே பெற்ற அம்முவின் கன்னத்தில், ஒரு நாளில் முதன்முதலில் அறையொன்று கிடைக்கிறது. எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் தவிக்கும் அம்மு, தன் தாயிடம் அதை சொல்கிறார். இதைக்கேட்டவுடன், தன் மகளிடம் `நீ என்ன செஞ்ச? என கேட்கிறார் அந்த தாய். அம்மு வேகமாக, `நான் தான் தப்பு செஞ்சிருப்பேன்னு எப்படிம்மா நீ முடிவு பண்ணுன? அப்போ நான் தப்பு பண்ணிருந்தா, அவர் என்னை அடிக்கலாமா’ என்று கேட்கிறாள் அம்மு.

image

பின் அந்த அம்மாவே அம்முவின் நிலை புரிந்து அவளிடம் ஒரு விஷயத்தை சொல்கிறார். படத்தின் மிக முக்கியமான வசனமும் கருத்தும் இதுதான். அம்முவின் அம்மா சொல்கிறார்:

“உன்னோட அப்பா என்னை ஒருமுறை அடிச்சிருக்கிறார். அப்போ என்னோட அம்மா எங்கிட்ட `புருஷங்கிறவன் அடிக்கத்தான் செய்வான். இதுவொன்னும் புதுசா உனக்கு மட்டும் நடக்கல. உன் புருஷன் உன்னை மறுபடியும் அடிக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கு. இதை எந்தக் காலத்துலயும் நிறுத்தவும் முடியாது. ஆம்பளைங்களுக்கு கோவம் வரத்தான் செய்யும். ஏன்னா, அவன் வேலைக்கு போவான்; 1,008 டென்ஷன் இருக்கும். அப்போ அந்த டென்ஷனை யார்மேல காட்ட முடியும்? நம்ம மேல தான் கோவப்படுவாங்க. மொத்த காதலும் உனக்குதான் வேணும்னு நினைக்கிறள்ல… அப்போ மொத்த வலியையும் நீதான் ஏத்துக்கணும்.

image

ஒரு குழந்தை பிறந்தா, எல்லா பிரச்னையும் சரியாகிடும்’னு சொன்னாங்க. ஆனா எங்க அம்மா எனக்கு இதையெல்லாம் சொல்லிருக்கக்கூடாது. இதுக்கு பதிலா என்னோட அம்மா எங்கிட்ட `ஆண் என்பவன், தன்னோட மனைவிமேல கைநீட்டக்கூடாது. ஒருவேளை அவன் அடிச்சான்னா, அவன்கூட வாழ வேண்டிய கட்டாயம் அந்தப் பொண்ணுக்கு கிடையாது’னு சொல்லிருக்கணும். நான் உங்கிட்ட இதையே சொல்றேன். அம்மு, உனக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்” என்கிறார்.

இந்தியாவில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண் ஒவ்வொருவருக்கும், அவர்களின் தாய்மார்கள் சொல்லவேண்டிய மிக அழுத்தமான விஷயம் இது. அதை அம்மு அவ்வளவு நேர்த்தியாகவும் நியாமாகவும் அறத்தோடும் பேசியிருக்கிறது. இதற்காகவே `அம்மு’வை எழுதி இயக்கிய சாருகேஷ் சேகருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

படத்தில் இப்படி இன்னும் நிறைய அழுத்தமான வசனங்கள் உள்ளன. குறிப்பாக, தான் பாதிக்கப்படுகிறோம் என்பதை அம்மு உணர்கையில், அவள் சொல்வது `எனக்கே என் மேல மரியாதை இல்லாம போச்சு. அவர் என்ன பண்ணாலும், பொறுத்துக்கிட்டு ஒரு ஓரமா இருக்கேன்’ என சொல்வது நமக்குள்ளும் வலியை கடத்துகிறது.

image

படத்தின் இண்டெர்வெல் ப்ளாக்கில், அம்முவுக்கு தான் மட்டுமே தன்னுடைய பிரச்னைகளுக்கு தீர்வு என்பது புரிகிறது. அப்போது அவர் சொல்வது - `இனிமே நான் சும்மாருக்க மாட்டேன். எவனாவது வந்து என்னை காப்பாத்துவான்னு உட்கார்ந்துகிட்டு இருக்க முடியாது. எதாவது நடக்கனும்னா, நான் தான் எதாவது பண்ணனும்’ என்கிறார். அதற்குப்பின் அம்மு தொடுவதெல்லாம் அதிரடிதான். அதிரடி என்றவுடன், இவரும் அடிப்பரென நினைத்துவிடாதீர்கள். தெலுங்கு படமென்றாலும்கூட, இப்படத்தில் அப்படி நம்ப முடியாத காட்சிகளே கிடையாது. அம்மு, அந்தப் புரிதலுக்குப் தன் கணவனுக்கு பாடம் புகட்டுகிறாள். `இனி என் மேல் மட்டுமில்ல, வேற யார் மேலயும் கை நீட்டக்கூடாது’ என அறச்சீற்றம் கொள்கிறாள். அங்கிருந்து தன்னை தானே மீட்க தொடங்குகிறார் அவர்.

இடையே நிறைய ட்விஸ்ட்களும் படத்தில் உள்ளது. பாபி சிம்ஹா வருகிறார்... போலீஸ் நிலைய காட்சிகள் வருகின்றன... முகமூடி போட்ட கணவரின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக கழன்று விழுகிறது என்றிருக்க, அந்த நிலையில்தான் அம்மு கருவுறுகிறாள். அந்த தருணத்தில், பெண் உடல் மீது நிகழும் அரசியலையும் அம்மு பேசுகிறாள். அந்தக் குழந்தையை பெற்றெடுப்பதா, வேண்டாமா என்பதற்கு அம்மு எடுக்கும் முடிவுக்கு, இன்னொரு அப்ளாஸ்.

image

பொதுவாக குடும்ப வன்முறையென்பது, ஒரு நொடியில் தொடங்குவதில்லை. அதற்கு சில படிநிலைகள் இருக்கிறது. அதை அம்மு படக்குழு, மிக சென்சிட்டிவாக கையாண்டிருப்பது, மிகச்சிறப்பான விஷயம். குறிப்பாக அம்மு தன்னை தானே குற்றப்படுத்திக்கொள்ளும் சில காட்சிகள் அத்தனை எதார்த்தமாக இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்துக்கொண்டு, பிச்சைக்காரர் ஒருவரிடம் `அடி வாங்குற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்னே எனக்கு தெரில. எனக்கு தெரிஞ்சதெலாம், வெக்கமே இல்லாம அடிவாங்கிட்டு உட்கார்ந்து அழுவுறது. ச்ச… தப்பே பண்ணலைன்னாகூட, என்னை நானே திட்டிகிட்டே இருக்கேன். நான் ஏன் இப்படி இருக்கேன்? முதல்ல அவருக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது? கோவம் வந்தா கைநீட்டுவாரா? ஆனா அவர் கெட்டவர்னு கிடையாது… அரக்கன்னும் கிடையாது. என்னை ரொம்ப நல்லா பாத்துக்குவாரு. என்மேல அவருக்கு காதல் இல்லனுலாம் சொல்லமுடியாது. 

image

அப்பப்போ அவரை சுற்றி நடக்குற விஷயங்களால அவர் டென்ஷனாகி அப்படி பண்றாரு. அதனால இது முழுசா அவரோட தப்புன்னு சொல்லிட முடியாது. ஆனா என் மனசு இதை ஒத்துக்க மாட்டேங்குது. தினமும் இப்படியெல்லாம் நடக்காது. நிறைய நாள் நாங்க நல்லாதான் இருப்போம். யோசிச்சு பார்த்தா, மேக்சிமம் நாங்க நல்லாதான் இருப்போம். எப்பயாவது பிரச்னை வருதுன்னு நாம விட்டுட்டு போயிட்டா தப்புதானே? இதலாம் சகிச்சுகிட்டு நான் அவர்கிட்ட அன்பா இருந்தா, அவர் ஏதோ ஒரு நாள் திருந்துவாருல்ல… அவர் என்னை வலியே கொடுக்க முடியாத அளவுக்கு காதலிக்கணும். அந்தளவுக்கு அவர் என்னை லவ் பண்ணா போதும். அவர்தான் என்னோட உலகம்’ என்கிறார் அம்மு. இத்தனை குற்ற உணர்ச்சிக்குப் பின்னர்தான் அம்மு சீறிப்பாய்கிறாள். அதுவும் க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட ட்விஸ்ட், மனசை விட்டு நீங்காதபடி இருக்கிறது.

image

அம்முவாக ஐஷ்வர்ய லட்சுமி. ஒவ்வொரு உணர்ச்சியையும் அவ்வளவு நேர்த்தியாக கையாள்கிறார். திருமணத்துக்குப் பின் அள்ள அள்ள குறையாத அளவுக்கு கணவனுக்கு காதலை வழங்குவது – படுக்கையறையில் கொச்சைப்படுத்தும் வார்த்தைகளை சகிப்பது - முதல்முறை கணவனை கோபத்தை காணும்போது செய்வதறியாமல் திகைப்பது – நடுவழியில் கணவனால் தனித்துவிடப்படும்போது கையில் காசின்றி ஆளில்லா சாலையில் நிற்பது – மூஞ்சுக்கு நேரே வரும் விசிறியெறியப்பட்ட தட்டை கண்டு ஒளிவது என சின்ன சின்னதாக தொடங்கி, படுக்கையறையில் பெல்ட்டில் அடிவாங்குவது வரை நம்மை உரையவைக்கிறார். க்ளைமாஸில் `உன்னை பார்த்து எனக்கு பயம் இல்ல’ என தன்னை அப்யூஸ் செய்தவனிடம் தைரியமாக பேசுவது என திரையிலும் நம் மனதிலும் நிறைந்திருக்கிறார். சொல்லப்போனால், நிமிர வைக்கிறார்.

image

அம்மு மட்டுமன்றி, படத்தில் இருக்கும் அத்தனை கதாபாத்திர வடிவமைப்புமே இந்த சென்சிடிவ்வான விஷயத்தை, நேர்த்தியாக கையாள்கிறது. கணவராக நடித்திருக்கும் நவீன் சந்திராவும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். இவர்களுடன் பாபி சிம்ஹா, சத்யா கிருஷ்ணன், அஞ்சலி அமீர், ரகு பாபு உள்ளிட்டோரும் நம் கவனத்தை ஈர்க்கின்றனர்.

என்னடா இது, படத்தை அப்படியே இங்கேயே சொல்லிட்டீங்களே என நினைக்க வேண்டாம். இதையும் விட அழுத்தமாக, இரண்டாம் பாதியில் ஏராளமான விஷயங்களை செய்கிறாள் அம்மு. அம்மு பேசும் அரசியல் மிக முக்கியமானது. `அம்மு’ படத்தை, நல்ல படம் என சொல்வதை விட, உங்களை சற்று நிலைகுலைய வைக்கும் படமென்று சொல்லலாம். அம்மு, மனதை விட்டு நீங்காமல் நம்மை தொந்தரவு செய்வாள். அம்மு செய்யும் அந்த தொந்தரவு, ஒவ்வொருவரும் பெற வேண்டியது. ஏனெனில் இந்தியாவில் இன்னும் இன்றும் நிறைய அம்முக்கள் இருக்கிறார்கள். அவர்களும், அவர்களை சார்ந்த நாமும் மிஸ் பண்ணாம நிச்சயமா பார்க்க வேண்டிய படம் அம்மு. படம், தமிழில் அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.

இதை வாசிக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும் அம்முவோடு சேர்ந்து நாங்களும் சொல்கிறோம். `சரியோ தப்போ. உங்களோட எந்தவொரு முடிவையும், வேற யாரையும் எடுக்க விடாதீங்க. இது உங்க லைஃப். உங்க உடல். நீங்கதான் உங்களுக்கான முடிவுகளை எடுக்கணும்’. டாட்.

- ஜெ.நிவேதா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/cNzyaGH
via IFTTT

Comments

Popular posts from this blog

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை... ஏன்? நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM