ஓடிடி திரைப் பார்வை: ஃபாரஸ்ட் கம்ப் - குழந்தை மனம் கொண்ட மகத்தான மனிதனின் கதை! சகமனிதன் மீதான உங்கள் அபிப்ராயங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒருவனது இயலாமையை கிண்டல் செய்யும்போது உங்களது வக்கிரம்தான் பல்லைக் காட்டுகிறது. வெள்ளந்தியான மனிதர்களைக் கொண்டு உலகம் தொடர்ந்து தன்னை மறுசீரமைப்பு செய்து கொள்கிறது. சூழ்ச்சிகள் அறியாத மனிதர்களால் இந்த பூமி ரட்சிக்கப்படுகிறது. வாழ்க்கையினை அதன் போக்கில் காற்றில் பறக்கும் இறகு போல வாழ்ந்துவிட்டுப் போவது எத்தனை பெரிய வரம். இறகு போன்ற மனோநிலை வாய்க்கப் பெற்றவர்களுக்கே அந்த வரம் வசப்படும். அப்படியான வரத்தை வசப்படுத்திக் கொண்டு தன்நம்பிக்கையுடன் யாரையும் இம்சிக்காமல் வாழ்கிறவன் குறித்த சினிமாதான் ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump). தற்போது நெட்பிளிக்ஸில் காணக் கிடைக்கும் இந்த சினிமா 1994ல் வெளியானது. பேருந்து நிறுத்த இருக்கையில் அமர்ந்திருக்கிறான் இளைஞன் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ வெள்ளை இறகொன்று காற்றில் மிதந்து வந்து அவனது காலடியில் விழுகிறது. தனது அருகில் வந்து அமரும் கருப்பின இளம்பெண்ணிடம் இளைஞன் ஃபாரஸ்ட் தனது அதுநாள் வரையிலான கதையை சொல்லத் துவங்குகிறான். அக்கதையில் ஜென்னியின் காதல் மிளிர்கிறது. அவனுக்கும் கதைகேட்கும் பெண்ணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும், அவன் தொடர்ந்து தனது சிறுவயது வாழ்கையிலிருந்து நடந்தவற்றை சொல்லத் துவங்குகிறான். ஒருவர் மாற்றி ஒருவராக அந்தப் பேருந்து நிறுத்த இருக்கையில் வந்து அமர்கிறார்கள் அவரவர் பேருந்து வந்ததும் ஏறிச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் ஃபாரஸ்ட் எந்த இடையூறுமின்றி அவர்களது பதிலை எதிர்பார்க்காமல், விட்ட இடத்திலிருந்து தனது கதையை அடுத்தடுத்தவர்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறான். இப்படி தனக்கு விருப்பமான காரியங்களை மட்டும் செய்து எந்த பிரதிபலனும் எதிர்பாக்காமல் வாழ்பவன் தான் ஃபாரஸ்ட் கம்ப். படம் முழுவதும் ப்ளாஷ்பேக் காட்சிகளாக அவனது வாழ்கையை பேசுகிறது. ஆனால் இதை வெறும் பேசும் சித்திரமா நம்மால் கடந்து போய்விட முடியாது என்பதுதான் இப்படத்தின் அட்டகாச அம்சம். ”லைப் இஸ் லைக் எ பாக்ஸ் ஆஃப் சாக்லேட்ஸ், யூ நெவர் நோ வாட் யூ ஆர் கோயிங் டு கெட் நெக்ஸ்ட்” - இது தான் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ன் தாய், வாழ்க்கை பற்றி அவனுக்கு சொல்லிக் கொடுத்த தித்திப்பான போதனை. வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் அவன் இவ்வரிகளை உபயோகிக்கிறான். அறிவுத்திறன் அளவெண் குறைவாக உள்ள 6 வயது சிறுவன் ஃபாரஸ்ட். அவனுக்கு அப்பா கிடையாது. அம்மா அவனை எப்படியாவது வளர்த்து ஆளாக்க நினைக்கிறாள். அவனுக்கு சுயமாக அதிகம் சிந்திக்கத் தெரியாது, ஏதாவது சொன்னால் அதை செய்வான், அவ்வளவு தான். சரியாக நடக்க வராது. பள்ளிக்கு முதல் நாள் பேருந்தில் ஏறினால், இவனைப் பார்த்து யாருமே அருகில் அமர இடம் தரவில்லை, ஜென்னி மட்டுமே அவனுக்கு நெருங்கிய தோழியாகிறாள். அவள் கொடுக்கும் ஊக்கத்தில் அவனது கால்கள் கல்லூரி வரை ஓடுகிறது. இருவரின் நட்பும் தொடர்கிறது. ஜென்னியுடன் காமத்தை பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் போது கூட ஃபாரஸ்ட் அதை தவிர்த்து விடுகிறான். கல்லூரியில் ரக்ஃபீ விளையாட்டுக் குழுவில் சேர்ந்து ஃபாரஸ்ட் விளையாடுகிறான். உண்மையில் அவனுக்கு அந்த விளையாட்டு பற்றியெல்லாம் பெரிதாக தெரியாது. ஆனால் ”பந்தை அடுத்த எல்லை வரை கொண்டு ஓடு” என்றால் ஓடுவான் அவனை தடுக்க முடியாது. பந்தை அடுத்த எல்லைக்கு கொண்டு செல்வதுதான் அந்த விளையட்டில் வெற்றி என்பதெல்லாம் அவனுக்கு புரியாது. அவனது அபார ஆட்டம் அவனை தேசியக் குழுவில் இணைக்கிறது. ராணுவத்தில் கூட இணைகிறான். வியட்னாம் போரில் கலந்து கொள்கிறான். எல்லாம் குருட்டு நம்பிக்கை என்பார்களே அப்படித்தான். ஒருநாள் ஒரு ராணுவ அதிகாரி ஃபாரஸ்ட்டின் ராணுவ சேவை இன்றோடு முடிந்தது என அறிவிக்கிறார். அவன் எந்த வருத்தமும் இல்லாமல் வீடு திரும்புகிறான். அவனது தாய் அவனைக் காண ஸ்பான்சர்கள் வந்ததாகவும் அதனால் அவனுக்கு 25000 டாலர்கள் கிடைக்கப் போவது பற்றியும் சொல்கிறாள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கேட்டுக் கொள்கிறான். படம் முதல் காட்சியை நோக்கி நகர்கிறது. இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்த பெரியவர், அமெரிக்காவின் பெரிய மீன்தொழில் நிறுவனத்திற்கு ‘ஃபாரஸ்ட் கம்ப்’ தான் முதலாளி என்பதை நம்பாமல் சிரித்துவிட்டுப் போகிறார். அவன் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தனது புகைப்படம் ’ஃபார்ச்சூன்’ நாளிதழில் வந்திருப்பதை அடக்கத்துடன் காட்டுகிறான். மீண்டும் கதை சொல்லல் தொடர்கிறது... பாலியல் தொழிலாளியாக வாழ்க்கையை வாழ்வது என தேர்வு செய்துகொண்ட ஜென்னி தனது 6 வயது மகனுடன் வாழ்கிறாள். சரி செய்ய முடியாத வியாதியினால் தவணை முறையில் உலகைவிட்டு விடைபெற்றுக் கொண்டிருக்கிறாள் அவள். அவளது மரணத்திற்கு முன் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஜென்னியும், ஃபாரஸ்ட்டும் மகிழ்ச்சியாக தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். ஜென்னியை மரணம் அழைத்துக் கொள்கிறது. ஜென்னியின் மகனை வளர்க்கும் பொறுப்பை ‘ஃபாரஸ்ட்’ ஏற்கிறான். அச்சிறுவனை பள்ளி செல்லும் பேருந்தில் ஏற்றிவிடுகிறான். மீண்டும் அந்த வெள்ளை இறகு காற்றில் மிதந்து வருகிறது. ஆறு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய இத்திரைப்படம் ஓர் இதமான காட்சி அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும். இப்படம் உங்களுக்கு உங்களை மறு அறிமுகம் செய்து வைக்கும். உங்கள் கண்ணாடியில் உங்கள் முகமே தோன்றும். அத்தனை அற்புத மாயங்கள் செய்யும் இந்த தன்நம்பிக்கை சித்திரத்தை நாவலாக எழுதியவர் ’வின்ஸ்டன் க்ரூம்’. இயக்குனர் ராபர்ட் ஸுமெக்கீஸ் அவ்வெழுத்துகளை காட்சி மொழியாக்கினார். இப்படத்தின் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது ராபர்ட்டுக்கு கிடைத்தது., இவர் இயக்கிய அனிமேஷன் படமான ‘தி போலார் எக்ஸ்ப்ரஸ்’ இப்போதும் குழந்தைகளில் கனவில் ’கூ…குச்…குச்’ என குதூகலமாக பயணிக்கிறது. 'பஞ்சு மூடையை சுமந்து கொண்டு நீங்கள் நதியைக் கடக்கின்றீர்கள். எதையோ துரத்தித் துரத்தி தோற்றுப் போவதன் மூலம் எளிமையாக எடையற்று வாழ வேண்டிய உங்கள் வாழ்க்கையின் மீது பாரம் ஏற்றிக் கொள்கிறீர்கள். உங்கள் அச்சு முறிந்து வலியில் துடித்துப் போகிறீர்கள். உண்மையில் வாழ்க்கை என்பது சாகசங்கள் நிறைந்த சர்க்கஸ் அல்ல. வாழ்தல் என்பதொரு ஒரு எளிய கடமை அவ்வளவு தான். குழந்தை மனம் கொண்ட மகத்தான மனிதன் ஃபாரஸ்ட் கம்ப் நமக்கு சொல்லும் செய்தியும் அது தான். ”லைப் இஸ் லைக் எ பாக்ஸ் ஆஃப் சாக்லேட், யூ நெவர் நோ வாட் யூ ஆர் கோயிங் டு கெட் நெக்ஸ்ட்.” - சத்யா சுப்ரமணி முந்தைய ஓடிடி திரைப் பார்வை: உலகை நோக்கி காஸா குழந்தைகள் எழுப்பும் வலிமிகு கேள்வி - ’Born In Gaza’ Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சகமனிதன் மீதான உங்கள் அபிப்ராயங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒருவனது இயலாமையை கிண்டல் செய்யும்போது உங்களது வக்கிரம்தான் பல்லைக் காட்டுகிறது. வெள்ளந்தியான மனிதர்களைக் கொண்டு உலகம் தொடர்ந்து தன்னை மறுசீரமைப்பு செய்து கொள்கிறது. சூழ்ச்சிகள் அறியாத மனிதர்களால் இந்த பூமி ரட்சிக்கப்படுகிறது. வாழ்க்கையினை அதன் போக்கில் காற்றில் பறக்கும் இறகு போல வாழ்ந்துவிட்டுப் போவது எத்தனை பெரிய வரம். இறகு போன்ற மனோநிலை வாய்க்கப் பெற்றவர்களுக்கே அந்த வரம் வசப்படும். அப்படியான வரத்தை வசப்படுத்திக் கொண்டு தன்நம்பிக்கையுடன் யாரையும் இம்சிக்காமல் வாழ்கிறவன் குறித்த சினிமாதான் ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump). தற்போது நெட்பிளிக்ஸில் காணக் கிடைக்கும் இந்த சினிமா 1994ல் வெளியானது.

image

பேருந்து நிறுத்த இருக்கையில் அமர்ந்திருக்கிறான் இளைஞன் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ வெள்ளை இறகொன்று காற்றில் மிதந்து வந்து அவனது காலடியில் விழுகிறது. தனது அருகில் வந்து அமரும் கருப்பின இளம்பெண்ணிடம் இளைஞன் ஃபாரஸ்ட் தனது அதுநாள் வரையிலான கதையை சொல்லத் துவங்குகிறான். அக்கதையில் ஜென்னியின் காதல் மிளிர்கிறது. அவனுக்கும் கதைகேட்கும் பெண்ணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும், அவன் தொடர்ந்து தனது சிறுவயது வாழ்கையிலிருந்து நடந்தவற்றை சொல்லத் துவங்குகிறான்.

ஒருவர் மாற்றி ஒருவராக அந்தப் பேருந்து நிறுத்த இருக்கையில் வந்து அமர்கிறார்கள் அவரவர் பேருந்து வந்ததும் ஏறிச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் ஃபாரஸ்ட் எந்த இடையூறுமின்றி அவர்களது பதிலை எதிர்பார்க்காமல், விட்ட இடத்திலிருந்து தனது கதையை அடுத்தடுத்தவர்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறான். இப்படி தனக்கு விருப்பமான காரியங்களை மட்டும் செய்து எந்த பிரதிபலனும் எதிர்பாக்காமல் வாழ்பவன் தான் ஃபாரஸ்ட் கம்ப். படம் முழுவதும் ப்ளாஷ்பேக் காட்சிகளாக அவனது வாழ்கையை பேசுகிறது. ஆனால் இதை வெறும் பேசும் சித்திரமா நம்மால் கடந்து போய்விட முடியாது என்பதுதான் இப்படத்தின் அட்டகாச அம்சம்.

image

”லைப் இஸ் லைக் எ பாக்ஸ் ஆஃப் சாக்லேட்ஸ், யூ நெவர் நோ வாட் யூ ஆர் கோயிங் டு கெட் நெக்ஸ்ட்” - இது தான் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ன் தாய், வாழ்க்கை பற்றி அவனுக்கு சொல்லிக் கொடுத்த தித்திப்பான போதனை. வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் அவன் இவ்வரிகளை உபயோகிக்கிறான்.

அறிவுத்திறன் அளவெண் குறைவாக உள்ள 6 வயது சிறுவன் ஃபாரஸ்ட். அவனுக்கு அப்பா கிடையாது. அம்மா அவனை எப்படியாவது வளர்த்து ஆளாக்க நினைக்கிறாள். அவனுக்கு சுயமாக அதிகம் சிந்திக்கத் தெரியாது, ஏதாவது சொன்னால் அதை செய்வான், அவ்வளவு தான். சரியாக நடக்க வராது. பள்ளிக்கு முதல் நாள் பேருந்தில் ஏறினால், இவனைப் பார்த்து யாருமே அருகில் அமர இடம் தரவில்லை, ஜென்னி மட்டுமே அவனுக்கு நெருங்கிய தோழியாகிறாள். அவள் கொடுக்கும் ஊக்கத்தில் அவனது கால்கள் கல்லூரி வரை ஓடுகிறது. இருவரின் நட்பும் தொடர்கிறது. ஜென்னியுடன் காமத்தை பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் போது கூட ஃபாரஸ்ட் அதை தவிர்த்து விடுகிறான்.

image

கல்லூரியில் ரக்ஃபீ விளையாட்டுக் குழுவில் சேர்ந்து ஃபாரஸ்ட் விளையாடுகிறான். உண்மையில் அவனுக்கு அந்த விளையாட்டு பற்றியெல்லாம் பெரிதாக தெரியாது. ஆனால் ”பந்தை அடுத்த எல்லை வரை கொண்டு ஓடு” என்றால் ஓடுவான் அவனை தடுக்க முடியாது. பந்தை அடுத்த எல்லைக்கு கொண்டு செல்வதுதான் அந்த விளையட்டில் வெற்றி என்பதெல்லாம் அவனுக்கு புரியாது. அவனது அபார ஆட்டம் அவனை தேசியக் குழுவில் இணைக்கிறது. ராணுவத்தில் கூட இணைகிறான். வியட்னாம் போரில் கலந்து கொள்கிறான். எல்லாம் குருட்டு நம்பிக்கை என்பார்களே அப்படித்தான்.

ஒருநாள் ஒரு ராணுவ அதிகாரி ஃபாரஸ்ட்டின் ராணுவ சேவை இன்றோடு முடிந்தது என அறிவிக்கிறார். அவன் எந்த வருத்தமும் இல்லாமல் வீடு திரும்புகிறான். அவனது தாய் அவனைக் காண ஸ்பான்சர்கள் வந்ததாகவும் அதனால் அவனுக்கு 25000 டாலர்கள் கிடைக்கப் போவது பற்றியும் சொல்கிறாள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கேட்டுக் கொள்கிறான்.

image

படம் முதல் காட்சியை நோக்கி நகர்கிறது. இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்த பெரியவர், அமெரிக்காவின் பெரிய மீன்தொழில் நிறுவனத்திற்கு ‘ஃபாரஸ்ட் கம்ப்’ தான் முதலாளி என்பதை நம்பாமல் சிரித்துவிட்டுப் போகிறார். அவன் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தனது புகைப்படம் ’ஃபார்ச்சூன்’ நாளிதழில் வந்திருப்பதை அடக்கத்துடன் காட்டுகிறான். மீண்டும் கதை சொல்லல் தொடர்கிறது...

பாலியல் தொழிலாளியாக வாழ்க்கையை வாழ்வது என தேர்வு செய்துகொண்ட ஜென்னி தனது 6 வயது மகனுடன் வாழ்கிறாள். சரி செய்ய முடியாத வியாதியினால் தவணை முறையில் உலகைவிட்டு விடைபெற்றுக் கொண்டிருக்கிறாள் அவள். அவளது மரணத்திற்கு முன் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஜென்னியும், ஃபாரஸ்ட்டும் மகிழ்ச்சியாக தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். ஜென்னியை மரணம் அழைத்துக் கொள்கிறது. ஜென்னியின் மகனை வளர்க்கும் பொறுப்பை ‘ஃபாரஸ்ட்’ ஏற்கிறான். அச்சிறுவனை பள்ளி செல்லும் பேருந்தில் ஏற்றிவிடுகிறான். மீண்டும் அந்த வெள்ளை இறகு காற்றில் மிதந்து வருகிறது.

image

ஆறு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய இத்திரைப்படம் ஓர் இதமான காட்சி அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும். இப்படம் உங்களுக்கு உங்களை மறு அறிமுகம் செய்து வைக்கும். உங்கள் கண்ணாடியில் உங்கள் முகமே தோன்றும். அத்தனை அற்புத மாயங்கள் செய்யும் இந்த தன்நம்பிக்கை சித்திரத்தை நாவலாக எழுதியவர் ’வின்ஸ்டன் க்ரூம்’. இயக்குனர் ராபர்ட் ஸுமெக்கீஸ் அவ்வெழுத்துகளை காட்சி மொழியாக்கினார். இப்படத்தின் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது ராபர்ட்டுக்கு கிடைத்தது., இவர் இயக்கிய அனிமேஷன் படமான ‘தி போலார் எக்ஸ்ப்ரஸ்’ இப்போதும் குழந்தைகளில் கனவில் ’கூ…குச்…குச்’ என குதூகலமாக பயணிக்கிறது.

'பஞ்சு மூடையை சுமந்து கொண்டு நீங்கள் நதியைக் கடக்கின்றீர்கள். எதையோ துரத்தித் துரத்தி தோற்றுப் போவதன் மூலம் எளிமையாக எடையற்று வாழ வேண்டிய உங்கள் வாழ்க்கையின் மீது பாரம் ஏற்றிக் கொள்கிறீர்கள். உங்கள் அச்சு முறிந்து வலியில் துடித்துப் போகிறீர்கள். உண்மையில் வாழ்க்கை என்பது சாகசங்கள் நிறைந்த சர்க்கஸ் அல்ல. வாழ்தல் என்பதொரு ஒரு எளிய கடமை அவ்வளவு தான். குழந்தை மனம் கொண்ட மகத்தான மனிதன் ஃபாரஸ்ட் கம்ப் நமக்கு சொல்லும் செய்தியும் அது தான். ”லைப் இஸ் லைக் எ பாக்ஸ் ஆஃப் சாக்லேட், யூ நெவர் நோ வாட் யூ ஆர் கோயிங் டு கெட் நெக்ஸ்ட்.”

- சத்யா சுப்ரமணி

முந்தைய ஓடிடி திரைப் பார்வை: உலகை நோக்கி காஸா குழந்தைகள் எழுப்பும் வலிமிகு கேள்வி - ’Born In Gaza’

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2Rk8g2w
via IFTTT

Comments

Popular posts from this blog

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை... ஏன்? நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM