ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெறவுள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணிக்கு இடையே ஒரு முக்கியமான போராட்டமாக அமைந்துள்ளது. மாநிலத்தில் இரு கட்சிகளும்தான் இதுவரை மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால், இந்த முறை தேர்தல் களம் ஒவ்வொரு கட்சிக்கும் சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. அதனை சற்றே விரிவாகப் பார்க்கலாம். இரண்டுமுறை ஆட்சி என்ற சாதனையை படைக்குமா கம்யூனிஸ்ட்? சிபிஐ (எம்) பொறுத்தவரை, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கேரளாதான். இதனால் இந்தத் தேர்தலில் எல்.டி.எஃப் கூட்டணிக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இடதுசாரிகள் அழிக்கப்படுவதைக் குறிக்கும். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் ஆளும் எல்.டி.எஃப் அரசு கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதுவும் பல்வேறு அரசியல் சர்ச்சைகள், ஊழல் பிரச்னைகளுக்கு மத்தியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி எல்.டி.எஃப் கூட்டணிக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை. தவிர, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எல்.டி.எஃப் தனது ஆட்சியின் கீழ் குறிப்பிடத்தக்க பல பணிகளை மேற்கொண்டுள்ளது. அது வரும் தேர்தலில் கைகொடுக்கலாம். இதுபோக, 2009-ல் காங்கிரஸின் யுடிஎஃப்-க்கு மாறிய ஜே.டி (எஸ்)-இன் ஒரு பிரிவு தற்போது மீண்டும் எல்.டி.எஃப் கூட்டணிக்கு திரும்பியுள்ளது. மேலும், கடந்த நான்கு தசாப்தங்களாக யுடிஎஃப் உடன் இருந்த பிராந்திய கிறிஸ்தவ கட்சியான கேரள காங்கிரஸ் (எம்) வழக்கத்திற்கு மாறாக எல்.டி.எஃப் உடன் இணைந்துள்ளது. மத்திய கேரளாவில் கிறிஸ்தவர்கள் மத்தியில் பலமாக இருக்கும் இக்கட்சி கம்யூனிஸ்ட் உடன் இணைந்திருப்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும். ஒருவேளை மீண்டும் ஆளும் கம்யூனிஸ்ட் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இரண்டுமுறை ஆட்சி அமைத்த முதல் கேரள கட்சி என்ற பெருமையை எட்டும். ஆட்சிக்கட்டிலில் அமருமா காங்கிரஸ்? காங்கிரஸைப் பொறுத்தவரை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்பட்ட இழப்பைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தலிலும் தோல்வி அடைய நேர்ந்தால், அது கட்சியின் மாநில அலகு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும், அது பாஜக தற்போது செய்து வரும் 'காங்கிரஸ் இல்லாத கேரளா’' இலக்குக்குத் தீவனமாக மாறும் என்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சுகின்றனர். இதனால்தான், சட்டப்பேரவைத் தேர்தலை முக்கியமாகக் கருதி, அதற்கான வேலைகளை காங்கிரஸின் டெல்லி தலைமை கையில் எடுத்துள்ளது. பாஜகவை திறம்பட எதிர்கொள்வதற்கும், மாநிலத்தில் உள்ள 30 சதவிகிதம் வசிக்கும் முஸ்லிம் வாக்குகளை தங்களுக்கு மடைமாற்றவும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, அதற்குத் தகுந்த பிரசார வியூகங்களையும் வகுத்து வருகிறது காங்கிரஸ். சபரிமலை பிரச்னை, கேரள கடலில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆழ்கடல் பயணிகளை அனுமதிக்க ஆளும் எல்.டி.எஃப் முடிவெடுத்ததாகக் கூறப்படும் முடிவின் சமீபத்திய சர்ச்சை ஆகியவற்றை ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக பிரசாரங்களில் முழங்க தொடங்கியிருக்கிறது காங்கிரஸ். இதைவிட முக்கியமாக உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு பின் மீண்டும் உம்மன் சாண்டியை 'ஆக்டிவ் பாலிட்டிக்ஸ்' செய்ய களமிறக்கி உள்ளது. தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவரை, தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு காங்கிரஸ் மீண்டும் அழைத்து வந்துள்ளது. ஆனால், இதுநாள் வரை தங்கள் கட்சிக்கு கிறிஸ்தவர்கள் வாக்குகளை கொண்டுவந்த கே.எம்.மாணியின் கேரளா காங்கிரஸ் இல்லாதது கட்சிக்கு வீழ்ச்சிக்கு வழிவகுக்க கூடிய ஒரு விஷயம். இதனால் யு.டி.எஃப் அதன் பாரம்பரிய வாக்கு வங்கியான கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் தனது கன்ட்ரோலில் வைத்திருக்க போராடி வருகிறது. வழக்கம்போல், சிபிஐ (எம்) மற்றும் காங்கிரஸ் ஆகியவை மதச்சார்பற்ற வாக்குகளை வெல்ல ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றன. குறிப்பாக, பாஜகவுக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்தில் இரு கட்சிகளும் இருக்கின்றன. இதனால், இரண்டு மாதங்கள் முன்பே தனது பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. இதற்கிடையில் பாஜக, 2016 தேர்தலில் ஓர் இடத்தை வென்றது. அப்போதைய தேர்தலில் இந்து கட்சியான பாரத் தர்ம ஜனசேனா (பி.டி.ஜே.எஸ்) உடன் போராடிய ஏழு இடங்களில் பாஜக இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பி.டி.ஜே.எஸ் பிளவுபட்டு அதன் நீரோட்டத்தை இழந்துள்ளது. ஆனால், பாஜக அதற்கு மாற்றாக கேரளாவில் வளர்ந்துள்ளது. சில விஷயங்களை திறம்பட கையாண்டதில் கட்சி ஓரளவுக்கு மாநிலத்தில் பேசப்பட்டு வருகிறது. அதேபோல் சமீபத்திய மாதங்களில் 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் போன்ற பல பிரபலமான நபர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். என்றாலும், அவர்கள் வாக்காளர்களில் ஒரு பகுதியை பாஜகவுக்கு கொண்டு வர முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கட்சிப் பேரணியில் உரையாற்றிய முதல்வர் பினராயி விஜயன், "அரசாங்கத்தை மதிப்பீடு செய்வது மக்கள்தான். எல்.டி.எஃப்-ஐ பொறுத்தவரை, வளர்ச்சி என்பது சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு விரிவான ஒன்றாகும். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பதன் மூலம், எதிர்க்கட்சி மக்களை அவமதித்துள்ளது" என்றார். மேலும் தேர்தலுக்கு தயார் என்றும் அவர் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ``கையூட்டு மற்றும் ஊழல்களில் சிக்கியுள்ள எல்.டி.எஃப் அரசாங்கத்திற்கு எதிராக கேரள மக்கள் யு.டி.எஃப்-க்கு பின்னால் அணிதிரள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றுள்ளார். ஒவ்வொரு கட்சிகளும் கிட்டத்தட்ட தற்போது வாழ்வா, சாவா போராட்டத்தில் இருக்கின்றன. இதனால் கேரள சட்டப்பேரவைத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புக்குரியதாக மாறியிருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. - மலையரசு தகவல் உறுதுணை: The Indian Express Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?

ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெறவுள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணிக்கு இடையே ஒரு முக்கியமான போராட்டமாக அமைந்துள்ளது. மாநிலத்தில் இரு கட்சிகளும்தான் இதுவரை மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால், இந்த முறை தேர்தல் களம் ஒவ்வொரு கட்சிக்கும் சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. அதனை சற்றே விரிவாகப் பார்க்கலாம்.

இரண்டுமுறை ஆட்சி என்ற சாதனையை படைக்குமா கம்யூனிஸ்ட்?

சிபிஐ (எம்) பொறுத்தவரை, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கேரளாதான். இதனால் இந்தத் தேர்தலில் எல்.டி.எஃப் கூட்டணிக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இடதுசாரிகள் அழிக்கப்படுவதைக் குறிக்கும். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் ஆளும் எல்.டி.எஃப் அரசு கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதுவும் பல்வேறு அரசியல் சர்ச்சைகள், ஊழல் பிரச்னைகளுக்கு மத்தியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி எல்.டி.எஃப் கூட்டணிக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை. தவிர, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எல்.டி.எஃப் தனது ஆட்சியின் கீழ் குறிப்பிடத்தக்க பல பணிகளை மேற்கொண்டுள்ளது. அது வரும் தேர்தலில் கைகொடுக்கலாம்.

image

இதுபோக, 2009-ல் காங்கிரஸின் யுடிஎஃப்-க்கு மாறிய ஜே.டி (எஸ்)-இன் ஒரு பிரிவு தற்போது மீண்டும் எல்.டி.எஃப் கூட்டணிக்கு திரும்பியுள்ளது. மேலும், கடந்த நான்கு தசாப்தங்களாக யுடிஎஃப் உடன் இருந்த பிராந்திய கிறிஸ்தவ கட்சியான கேரள காங்கிரஸ் (எம்) வழக்கத்திற்கு மாறாக எல்.டி.எஃப் உடன் இணைந்துள்ளது. மத்திய கேரளாவில் கிறிஸ்தவர்கள் மத்தியில் பலமாக இருக்கும் இக்கட்சி கம்யூனிஸ்ட் உடன் இணைந்திருப்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும். ஒருவேளை மீண்டும் ஆளும் கம்யூனிஸ்ட் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இரண்டுமுறை ஆட்சி அமைத்த முதல் கேரள கட்சி என்ற பெருமையை எட்டும்.

ஆட்சிக்கட்டிலில் அமருமா காங்கிரஸ்?

காங்கிரஸைப் பொறுத்தவரை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்பட்ட இழப்பைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தலிலும் தோல்வி அடைய நேர்ந்தால், அது கட்சியின் மாநில அலகு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும், அது பாஜக தற்போது செய்து வரும் 'காங்கிரஸ் இல்லாத கேரளா’' இலக்குக்குத் தீவனமாக மாறும் என்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சுகின்றனர். இதனால்தான், சட்டப்பேரவைத் தேர்தலை முக்கியமாகக் கருதி, அதற்கான வேலைகளை காங்கிரஸின் டெல்லி தலைமை கையில் எடுத்துள்ளது.

image

பாஜகவை திறம்பட எதிர்கொள்வதற்கும், மாநிலத்தில் உள்ள 30 சதவிகிதம் வசிக்கும் முஸ்லிம் வாக்குகளை தங்களுக்கு மடைமாற்றவும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, அதற்குத் தகுந்த பிரசார வியூகங்களையும் வகுத்து வருகிறது காங்கிரஸ். சபரிமலை பிரச்னை, கேரள கடலில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆழ்கடல் பயணிகளை அனுமதிக்க ஆளும் எல்.டி.எஃப் முடிவெடுத்ததாகக் கூறப்படும் முடிவின் சமீபத்திய சர்ச்சை ஆகியவற்றை ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக பிரசாரங்களில் முழங்க தொடங்கியிருக்கிறது காங்கிரஸ்.

இதைவிட முக்கியமாக உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு பின் மீண்டும் உம்மன் சாண்டியை 'ஆக்டிவ் பாலிட்டிக்ஸ்' செய்ய களமிறக்கி உள்ளது. தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவரை, தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு காங்கிரஸ் மீண்டும் அழைத்து வந்துள்ளது.

image

ஆனால், இதுநாள் வரை தங்கள் கட்சிக்கு கிறிஸ்தவர்கள் வாக்குகளை கொண்டுவந்த கே.எம்.மாணியின் கேரளா காங்கிரஸ் இல்லாதது கட்சிக்கு வீழ்ச்சிக்கு வழிவகுக்க கூடிய ஒரு விஷயம். இதனால் யு.டி.எஃப் அதன் பாரம்பரிய வாக்கு வங்கியான கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் தனது கன்ட்ரோலில் வைத்திருக்க போராடி வருகிறது. வழக்கம்போல், சிபிஐ (எம்) மற்றும் காங்கிரஸ் ஆகியவை மதச்சார்பற்ற வாக்குகளை வெல்ல ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றன. குறிப்பாக, பாஜகவுக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்தில் இரு கட்சிகளும் இருக்கின்றன. இதனால், இரண்டு மாதங்கள் முன்பே தனது பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது.

இதற்கிடையில் பாஜக, 2016 தேர்தலில் ஓர் இடத்தை வென்றது. அப்போதைய தேர்தலில் இந்து கட்சியான பாரத் தர்ம ஜனசேனா (பி.டி.ஜே.எஸ்) உடன் போராடிய ஏழு இடங்களில் பாஜக இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பி.டி.ஜே.எஸ் பிளவுபட்டு அதன் நீரோட்டத்தை இழந்துள்ளது. ஆனால், பாஜக அதற்கு மாற்றாக கேரளாவில் வளர்ந்துள்ளது. சில விஷயங்களை திறம்பட கையாண்டதில் கட்சி ஓரளவுக்கு மாநிலத்தில் பேசப்பட்டு வருகிறது. அதேபோல் சமீபத்திய மாதங்களில் 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் போன்ற பல பிரபலமான நபர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். என்றாலும், அவர்கள் வாக்காளர்களில் ஒரு பகுதியை பாஜகவுக்கு கொண்டு வர முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

image

இந்நிலையில், நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கட்சிப் பேரணியில் உரையாற்றிய முதல்வர் பினராயி விஜயன், "அரசாங்கத்தை மதிப்பீடு செய்வது மக்கள்தான். எல்.டி.எஃப்-ஐ பொறுத்தவரை, வளர்ச்சி என்பது சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு விரிவான ஒன்றாகும். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பதன் மூலம், எதிர்க்கட்சி மக்களை அவமதித்துள்ளது" என்றார். மேலும் தேர்தலுக்கு தயார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ``கையூட்டு மற்றும் ஊழல்களில் சிக்கியுள்ள எல்.டி.எஃப் அரசாங்கத்திற்கு எதிராக கேரள மக்கள் யு.டி.எஃப்-க்கு பின்னால் அணிதிரள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றுள்ளார்.

ஒவ்வொரு கட்சிகளும் கிட்டத்தட்ட தற்போது வாழ்வா, சாவா போராட்டத்தில் இருக்கின்றன. இதனால் கேரள சட்டப்பேரவைத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புக்குரியதாக மாறியிருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.

- மலையரசு

தகவல் உறுதுணை: The Indian Express

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3uAfpKR
via

Comments

Popular posts from this blog

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை... ஏன்? நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM