இளையதலைமுறை அம்மாக்கள் போற்றப்படவேண்டியவர்களா ?
இளையதலைமுறை அம்மாக்கள் போற்றப்படவேண்டியவர்களா?
பாசம் அன்பு என்ற பெயரில் வளர்ந்த குழந்தைகளுக்கு இன்னமும் சோறுஊட்டிகொண்டுதான் இருக்கிறார்கள் வயதுக்கு வந்த பெண்குழந்தைகளுக்கு இன்னமும் சுயமாக துணிதுவைக்க தெரியாது
ஆண்குழந்தைகள் சாப்பிட்ட தட்டைகூட கழுவி வைக்கமாட்டார்கள் என்று பெண்கள் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது எந்த தாய் தன் மகனை கழுவ சொல்கிறாள் அப்படியே கழுவினாலும் நீ ஆம்பளை கழுவாதே என்றுதான் சொல்கிறார்கள்
குழந்தை வளர்ப்பது என்பது ஒரு குறிப்பிட்ட வயதுவரை அம்மாவை சார்ந்ததுதான் ஏன் ஆண்களுக்கு பங்கு இல்லியா என்றால் அப்படி ஒரு கூட்டத்தை உருவாக்கியதும் பெண்கள்தான்
இணையதளத்தில் பெண்களுக்கான சமூகநீதி பெண்விடுதலை உடைகள் சுதந்திரம் பற்றி பெண்கள் எழுதும்போதெல்லாம் அதை எதிர்ப்பது நக்கல் பன்னுவது வக்கீரமாக பெண்குறியை சொல்லி கேவலமாக பதிவு போடுவது என்று பார்த்தால் 99%இளையதலைமுறை ஆண்கள்தான் இவர்கள் அம்மாக்கள் நிச்சயமாக ஓரளவு படித்தவர்களாகதானே இருப்பார்கள்
சரி இவர்களை விடுங்கள் இனிமே வளரும் உங்க பையன் ஒரளவிற்கு பெண்களை சகமனுசியா பார்ப்பான் என்று உங்களால் உறுதி தர முடியுமா?
சமூகத்தில் குடிகாரர்களாக பாலியல் வன்முறையாளராக தருதலையாக ஒன்னுக்கும் உதவாத தடிமாடுகளா ஆண்களை உருவாக்கியதில் பெரும் பங்கு பெண்களையே சாரும்
இப்படி வளர்க்கிற பையன் தனக்கு வர போற மனைவியை எப்படி சகமனுசியா பார்ப்பான் ஒடுக்கதான் நினைப்பான்
விளக்கு பூஜை விரதம் ஜெபம் பன்னினால் நல்ல புருசன் கிடைப்பான் என்று படிக்காத அம்மா நம்மியதில் ஒரு ஞாயம் இருக்கலாம்
படித்த பெண்களே இன்னமும் நம்புவதுதான் வேடிக்கையாக இருக்கிறது
Comments
Post a Comment